சென்னை: அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஞானசேகரனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொறியியல் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். புகார் அளித்த மாணவியின் தனிப்பட்ட விபரங்கள், எஃப்ஐஆர் காப்பி உள்ளிட்டவைகள் சோஷியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்தி, பல்வேறு அறிவுறுத்தல்களையும், உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.கோர்ட் உத்தரவுபடி ஞானசேகரன் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், நீதிமன்ற காவலில் உள்ள ஞானசேகரனை போலீசார் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து விதமான தாக்குதல்களும் நிறுத்தப்பட்டன - இந்தியா அறிவிப்பு
தாக்குதலை உடனடியாக நிறுத்த இந்தியா, பாகிஸ்தான் ஒப்புதல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்
இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பேரணி.. ஆளுநர் பாராட்டு!
எனது வருவாயை தேசிய பாதுகாப்பிற்காக அளிக்கிறேன்...இளையராஜா அறிவிப்பு
அமேசானில் ரூபாய் 3 லட்சத்துக்கு பில்.. எதற்கு தெரியுமா?.. இந்த பயலை வச்சுக்கிட்டு!!
முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனைக் கூட்டம்
பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில்.. காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு.. பீதியில் உறைந்த மக்கள்..!
ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இவரா?...செம சம்பவம் காத்திருக்கு போலவே
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்...aicwa அறிவுறுத்தல்
{{comments.comment}}