சென்னை: தனது வாகனத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரின் வாகனம் மோதியதைத் தட்டிக் கேட்டதற்காக ஒரு வழக்கறிஞரை நடு ரோட்டில் வைத்து விசிகவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் தாக்கிய செயல் கடுமையான கண்டனத்துக்குரியது என்று தமிழ்நாடு முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றம் அருகே நேற்று ஒரு பரபரப்பு சம்பவம் நடைபெற்றது. விசிக தலைவர் தொல் திருமாவளவன் காரில் வந்தபோது ஒரு டூவீலர் காரருடன், விசிகவினருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. டூவீலரில் வந்தவர் அதிமுக வழக்கறிஞர். அவரை விசிக வழக்கறிஞர்கள் தாக்குவதும், டூவீலரை சாலையில் தள்ளி விட்ட காட்சியும் வீடியோவில் பதிவாகியுள்ளது. காவல்துறையினர் குறுக்கிட்டு தடுக்க முயன்றும் கூட மோதல் பெரிதாக மாறிப் போனது.

இந்த சம்பவம் தொடர்பாக விசிக தலைவர் தொல் திருமாவளவன் காணொலி மூலம் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளார். தனது கார் டூவீலரில் மோதவில்லை என்றும் அவர் விளக்கியுள்ளார். இந்த நிலையில் அண்ணாமலை எக்ஸ் தளப் பதிவில் இதை விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், பகலில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான அராஜகத்தில், விசிக குண்டர்கள் ஒரு வழக்கறிஞரை, தன்னை மோதிய கார் ஓட்டுநரிடம் கேள்வி கேட்டதற்காக தாக்கியதாகக் கூறப்படுகிறது, இதைவிட மோசமானது என்னவென்றால், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து போராட்டம் நடத்திவிட்டு திரும்பிய தொல். திருமாவளவனின் வாகனத் தொடரிலேயே ஒரு வழக்கறிஞர் தாக்கப்பட்டுள்ளார் என்று அதில் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம், அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் படைத்த புதிய சாதனை: தமிழ்நாட்டின் முதல் கூட்டணி அரசு.. நீண்ட கால கனவு நனவானது!
முதல்வர் விஜய் சர்க்கார்.. இளைஞர்கள் நிரம்பிய அமைச்சரவை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு இடம்?
புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு.. செங்கோட்டையன் இலாகா மாற்றம்
அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.க்கள் நிலை.. அடுத்து என்ன செய்ய போகிறார்கள்?
தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: 19 மாவட்டங்களில் அமைச்சர்கள் இல்லை
அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.,க்களுக்கு தமிழக அமைச்சரவையில் இடமில்லை!
விஜய் அமைச்சரவை: 23 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு.. 3 பெண்களுக்கு இடம்!
சிந்தனைச் சிதறல்.. வாய்ப்புகளுக்காக காத்திருங்கள்.. கிடைத்தால் விடாதீர்கள்
மனிதனின் இரு பக்கங்கள்: பலமும் பலவீனமும்
{{comments.comment}}