ஆக்ஸ்போர்ட் பல்கலை.யில் அரசியல் படிப்பை மேற்கொள்ள.. லண்டன் புறப்பட்டார்.. பாஜக தலைவர் அண்ணாமலை!

Aug 28, 2024,06:47 PM IST

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் தொடர்பான படிப்பை மேற்கொள்ள இன்று காலை சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டார். 


இதற்காக சென்னை விமான நிலையத்தில் திரளாக திறந்த தொண்டர்கள் உற்சாகமாக அண்ணாமலையை வழியனுப்பி வைத்தனர். மூன்று மாதம் அங்கு தங்கி இருந்து படிப்பை மேற்கொள்ளும் அண்ணாமலை காணொளி வாயிலாக கட்சியை கவனித்துக் கொள்வார் என்று கூறப்படுகிறது.




லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் படிப்புக்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த  40 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் ஒருவர். இந்த படிப்புக்கான செலவை லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமே ஏற்றுள்ளதாம். இதனால்  ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அண்ணாமலை மூன்று மாத கால அரசியல் படிப்பை தொடங்க லண்டன் சென்றுள்ளார்.


இன்று காலை சென்னை விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்டார் பாஜக அண்ணாமலை. அப்போது சென்னை விமான நிலையத்தில் பாஜக தொண்டர்களும் நிர்வாகிகளும் உற்சாகமாக அவரை வழியனுப்பி வைத்தனர். லண்டனில் செப்டம்பர் இரண்டாம் தேதி முதல் தனது அரசியல் படிப்பை தொடங்கும் அண்ணாமலை மூன்று மாதம் அங்கு தங்கி இருந்து  படிப்பை முடித்துவிட்டு மீண்டும் நவம்பர் மாதம் இறுதியில் தமிழகம் திரும்புகிறார். 


அண்ணாமலை லண்டனுக்கு செல்லும் இந்த இடைப்பட்ட காலத்தில் அவருக்கு பதிலாக மாற்றுத் தற்காலிக தலைவர் நியமிக்கப்படலாம் எனவும் கூறப்பட்டு வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நான் லண்டனுக்கு சென்றாலும் அங்கிருந்து கட்சிப் பணிகளை கவனித்துக் கொள்வேன். ஆளுங்கட்சியினரின்  தவறுகளை சுட்டிக்காட்டிக் கொண்டுதான் இருப்பேன். எனது சண்டைகள் அறிக்கை மூலம் தொடரும். நான் வெளிநாட்டுக்கு படிக்க சென்றாலும் என் இதயம் தமிழ்நாட்டில் தான் இருக்கும் என தெரிவித்துள்ளார் அண்ணாமலை.


ஒரு பக்கம், தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க அரசு முறை பயணமாக 17 நாட்கள் அமெரிக்கா சென்று இருக்கிறார் முதல்வர் மு க ஸ்டாலின். இந்த நிலையில் இன்னொரு முக்கியக் கட்சியான பாஜகவின் தலைவர் அண்ணாமலை லண்டனுக்குப் புறப்பட்டுப் போயுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்