அக்டோபருக்குப் பிறகு எத்தனை முறை விஜய் வெளியே வந்தார்?.. சென்னை வந்ததும் அண்ணாமலை கேட்ட முதல் கேள்வி

Dec 01, 2024,02:51 PM IST

சென்னை: நடிகர் விஜய்யின் அரசியல் வருகையை நான் வரவேற்கிறேன். அவரைப் பார்த்து பாஜக பயப்படவில்லை. அக்டோபருக்குப் பிறகு அவர் எத்தனை முறை வெளியே வந்திருக்கிறார் என்பதை மட்டும் அறிய விரும்புகிறேன் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கேட்டுள்ளார்.


தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை லண்டனில் அரசியல் தொடர்பான படிப்புக்காக சென்றிருந்தார். அதை முடித்துக் கொண்டு இன்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் பெரும் திரளாக திரண்டிருந்த பாஜகவினர் அவரை வரவேற்றனர். வரவேற்புக்குப் பின்னர் செய்தியாளர்களை அண்ணாமலை சந்தித்தார்.


செய்தியாளர்களிடம் விஜய் குறித்தும் தமிழக வெற்றிக் கழகம் குறித்தும் அண்ணாமலை பேசினார். அப்போது அவர் கூறுகையில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகையை அப்போதே நான் வரவேற்றுள்ளேன். இப்போதும் வரவேற்கிறேன். மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கில் வந்திருக்கிறார். நிறைய பேசியிருக்கிறார். அதுகுறித்து பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம். பாஜக தலைவர்கள் எதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமோ அதற்கெல்லாம் சொல்லியுள்ளனர்.




விஜய் அவர்கள் ஆக்டிவ் பாலிட்டிக்ஸுக்கு வரும்போது எங்களது கருத்துக்களை வைப்போம். மக்களுக்கு இது இன்னும் ஒரு வாய்ப்பு. மக்களே இதைத் தீர்மானிப்பார்கள். ஆனால் விஜய் அவர்கள் திராவிடக் கட்சிகள் பேசும் அதே சித்தாந்தத்தைத்தான் பேசுகிறார். நாங்கள் எங்களது இடத்தில் பத்திரமாக இருக்கிறோம். எங்களது பாதங்கள் வலிமையாக தாங்கி நிற்கின்றன. அவரது கொள்கை கிட்டத்தட்ட திராவிடக் கொள்கைதான். எனவே பாதிப்பு யாருக்கு என்பதை அனைவரும் அறிவர்.


எப்போதுமே புதியவர்களைப் பார்த்து பாஜக பயப்படாது. விஜய் பெரிய நடிகர். பெண்கள், குழந்தைகள், வயதானவர்களுக்குப் பிடித்த நடிகர். பெரிய இடத்தைப் பிடித்தவர். அகில இந்திய அளவில் அதிக வசூல் தரக் கூடியவராக இருந்திருக்கிறார். படிப்படியாக தன்னை வளர்த்துக் கொண்டு வந்துள்ளார். ஆனால் அரசியல் களம் வேறு. 


அக்டோபருக்குப் பிறகு அவர் எத்தனை முறை வெளியே வந்துள்ளார். ஆண்டு முழுவதும் மக்களுடன் இருக்க வேண்டியது அரசியல். இதற்கு விஜய் தன்னை எப்படி தயார்படுத்திக் கொண்டு வரவார், ஜெயிப்பார் என்பதை அவரே தீர்மானிக்க வேண்டும். எங்களுக்குப் பயமில்லை. திராவிடக் கட்சிகள் மூன்றாக பிரிந்துள்ளன. பாஜகவின் தேசிய வாக்கு அதிகரித்துக் கொண்டே போகிறது. விஜய்யை கேள்வி கேட்கும் இடத்தில் நாங்கள் கேள்வி கேட்போம் என்றார் அண்ணாமலை.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு

news

இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

news

உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?

news

Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு

news

மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!

news

உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?

news

Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி

news

சந்தோஷம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்