கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம்.. தமிழ்நாடு முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

Jun 22, 2024,05:21 PM IST

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்திக் கைதானார்கள்.


கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 150க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 55 பேர் உயிரிழந்த நிலையில், பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.




இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை அறிவித்துள்ளனர். இன்று  தமிழக அரசைக் கண்டித்து பாஜகவினர்  தமிழகம் முழுவதிலும் ஆர்ப்பாட்டம் செய்தனர். மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட பாஜக மூத்த தலைவர் எச் ராஜா பங்கேற்றார். இதையடுத்து எச் ராஜா உட்பட பாஜக நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். மேலும் பல இடங்களில் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்கப்படாததால் வாக்குவாதம் ஏற்பட்டது. 


அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக பாஜகவினரை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். முன்னதாக இந்த போராட்டம் குறித்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில்,  கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காமல், ஜம்பதுக்கும் அதிகமான உயிர்களைப் பலி வாங்கிய திமுக அரசைக் கண்டித்து, பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.


திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், கிருஷ்ணகிரி என பல மாவட்டங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களில், மூத்த தலைவர் எச் ராஜா உட்பட நூற்றுக்கணக்கான பாஜக சகோதர சகோதரிகள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.


திமுக அரசின் நிர்வாகத் தோல்வியும், கள்ளச்சாராய வியாபாரிகளுடன் திமுகவினருக்கு உள்ள தொடர்பும், பொதுமக்களுக்குத் தெரிந்து விடக் கூடாது என்ற பதட்டத்தில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பாஜக சகோதர சகோதரிகளை முடக்கப் பார்க்கிறது.


இந்த அடக்குமுறைக்கு பாஜக அஞ்சப் போவதில்லை. பிற மாவட்டங்களிலும்,  கள்ளச்சாராய மரணங்களுக்குக் காரணமான திமுக அரசைக் கண்டித்து தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் எனக் கூறியிருந்தார்.

சமீபத்திய செய்திகள்

news

வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி

news

அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்

news

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?

news

என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி

news

ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு

news

பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!

news

திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்

news

எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்