சென்னை: முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று தமிழ்நாட்டிற்கு டெல்லி எப்போதுமே out of control-தான் என கூறியிருந்த நிலையில், முன்னாள் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடி பதில் கொடுத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று பல்வேறு நலத்திட்டங்களை வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பாஜக மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார். குறிப்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழக வருகையை சுட்டிக்காட்டி, அமித்ஷா அல்ல. எத்தனை ஷா வந்தாலும் சரி, உங்களால் தமிழ்நாட்டை ஆள முடியாது. தமிழ்நாடு எப்பயுமே டெல்லிக்கு out of control தான். அதாவது தமிழ்நாடு எப்பவுமே டெல்லியின் ஆளுகைக்கு உட்பட்டு இருக்காது. தமிழ்நாட்டுக்குள் எப்படியாவது நுழைந்து இந்த மண்ணை பாழாக்க துடிக்கும் பாஜகவுக்கும், அதற்கு துணை போகும் இனைமான இல்லாத அடிமைகளுக்கும், தமிழ்நாட்டின் நுழைவு வாயிலான திருவள்ளுவர் மாவட்டத்திலிருந்து சவால் விடுகிறேன். எத்தனை ஏவல் அமைப்புகளை வேண்டுமானாலும் துணைக்கு அழைத்து வாருங்கள். ஒரு கை பார்ப்போம். 2026லும் திராவிட மாடல் ஆட்சி தான் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் முதல்வர் மு. க ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில், முதல்வர் மு.க ஸ்டாலின், நீங்கள் நேற்று Out of control என்று சொன்னீர்கள், ஆனால் உண்மையில், நீங்கள் தமிழக மக்களுடன் "Out of contact"ல் இருக்கிறீர்கள். அவர்கள் உங்கள் ஆட்சியின் கோபத்தைத் தொடர்ந்து அனுபவித்து வருகின்றனர் என பதிவிட்டுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் சைக்கிள் ஓட்டுவது போன்ற படத்தில் இந்த அவுட் ஆப் கான்டாக்ட் வாசகத்தை போட்டு போஸ்ட் போட்டுள்ளார் அண்ணாமலை.
ஏற்கனவே தமிழ்நாட்டில் கெட் அவுட் மோடி, கோ பேக் மோடி, கெட் அவுட் ஸ்டாலின் என்று ஏகப்பட் ஸ்லோகன்களை திமுகவும், பாஜகவும் மாறி மாறி கையில் எடுத்து கதி கலங்க வைத்துள்ளன. இந்த வரிசையில் இனி out of control - out of contact ஆகியவையும் இடம் பெறுமா என்று தெரியவில்லை.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}