சென்னை: தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் அரசாணைகள் மற்றும் சுற்றறிக்கைகள் இனி தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசு அறிவித்த மும்மொழிக் கொள்கை எனப்படும் இந்தி திணிப்புக்கு பல்வேறு கட்சிகளும் தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாடு அரசு 3,500 ஆண்டுகள் பழைமை மிக்க பண்பாடு, நாகரிகத்தின் மூத்த மொழியாக உள்ள தமிழ் மொழி, தாய் மொழியாகவும், இரண்டாவது ஆங்கில மொழியாகவும் இருக்கும் நிலையே தொடர வேண்டும் என தமிழ்நாடும், தமிழக மக்களும் விரும்புகின்றனர்.
இதில் விருப்பப்பட்டு வேறு மொழியை அவர்கள் கற்றுக் கொள்ளலாம். ஆனால், ஒரு மொழியைக் கட்டாயப்படுத்தி, திணிப்பதை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.இதனால் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அதே சமயத்தில் மும்மொழி கொள்கைக்கு எதிராக பல்வேறு முன்னெடுப்புகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி பொதுமக்கள் ஒன்று கூடும் முக்கிய இடங்கள் மற்றும் அரசு அலுவலங்களில் பெயர் பலகைகள் தமிழில் தான் இருக்க வேண்டும். இரண்டாவது மொழியாக ஆங்கிலம் இருக்க வேண்டும் எனக் அறிவுறுத்தப்பட்டு வந்தது. இதனால் பல்வேறு இடங்களில் உள்ள ஹிந்தி வார்த்தைகள் அழிக்கப்பட்டு வந்தது.
அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது தமிழக அரசு. பொதுவாக அனைத்து துறை சார்ந்த அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் அறிவிப்புகள், கோப்புகள், கடிதங்கள், என அனைத்து அரசாணைகளும் ஆங்கிலத்தில் தான் இருக்கும்.ஒரு சில அறிவிப்புகள் மட்டுமே தமிழில் வெளியிட்டு வருவது வழக்கம்.
ஆனால், இனி தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் அரசாணைகள் மற்றும் சுற்றறிக்கைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும், துறை தலைமை அலுவலகங்களில் இருந்து பிற அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் கருத்துரைகள் தமிழில் மட்டுமே இடம்பெற வேண்டும். பொதுமக்களிடமிருந்து பெறப்படும் தமிழ் கடிதங்களுக்கு தமிழிலேயே பதில் அளிக்க வேண்டும்.
அரசு பணியாளர்கள் அனைத்து பதிவுகளிலும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை...வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
தமிழக அரசின் மாநிலக் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி, பாடகர் வேல்முருகன் பெயர்கள்
ஜார்க்கண்ட் தேர்வு முறைகேடு வழக்கு: முன்னாள் தேர்வாணையத் தலைவர் கிடாங்ணதே கைது
தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியில் பாட வற்புறுத்தவில்லை - கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
சூப்பர் ஆண்டி.. பொறணி பேசியே 2 வீடு வாங்கி செட்டிலான கொலம்பியா மிரியம்!
நோட்டிஃபிகேஷன் மனிதர்கள் – போன் வைப்ரேட் ஆனா மட்டும் போதாது மச்சா!
சட்டசபையில் கலகல.. முதல்வர் விஜய்யை குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைத்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!
மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து என்று மத்திய அரசு சொல்லவே இல்லை.. டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்
Monday Motivation: இயற்கையைக் கொ(வெ)ல்லும் செயற்கை.. நல்லதல்ல விரைந்து விழிப்படைவோம்!
{{comments.comment}}