சென்னை: தமிழ்நாடு முழுவதும் வெயில் தாக்கம் கடுமையாக இருப்பதால் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியருக்கு இறுதித் தேர்வை முன் கூட்டியே முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் வெயில் கடுமையாக உள்ளது. கடுமையான வெயில் அடித்து வருவதால் வெளியில் தலை காட்ட முடியவில்லை. அதிலும் தற்போது பரீட்சை காலம் என்பதால் பிற்பகலில் தேர்வு எழுதச் செல்வோர் கடும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர். இதனால் பெற்றோர்களும் தங்களது பிள்ளைகள் படும் கஷ்டத்தைக் கண்டு அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தற்போது பிளஸ்டூ பரீட்சை முடிந்து விட்டது. பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்கி நடந்து வருகின்றன. இதுதவிர 1 முதல் 5ம் வகுப்புகளுக்குரிய இறுதித் தேர்வுகள் ஏப்ரல் 9ம் தேதி தொடங்கி ஏப்ரல் 21ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 8ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது வெயில் கடுமையாக அடித்து வருவதால் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியருக்கான இறுதித் தேர்வை முன்கூட்டியே முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி இவர்களுக்கு 21ம் தேதிக்குப் பதில், 17ம் தேதியடன் இறுதித் தேர்வுகள் முடிவடையவுள்ளன. இவர்களுக்கான தேர்வும் கூட ஏப்ரல் 9ம் தேதிக்குப் பதில் 7ம் தேதியே தொடங்கவுள்ளது. இந்த மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறையும் விடப்படவுள்ளது.
புதிய தேர்வு அட்டவணையையும் தொடக்கக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அந்த புதிய அட்டவணை விவரம்:
1 முதல் 3ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் 12 மணி வரை தேர்வு நடைபெறும். இவர்களுக்கு 7ம் தேதி தமிழ், 8ம் தேதி விருப்ப மொழி, 9ம் தேதி ஆங்கிலம், 11ம் தேதி கணக்கு தேர்வுகள் நடைபெறும்.
4ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு 7ம் தேதி தமிழ், 8ம் தேதி விருப்ப மொழி, 9ம் தேதி ஆங்கிலம், 11ம் தேதி கணக்கு, 15ம் தேதி அறிவியல், 17ம் தேதி சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“Open பண்ண வெச்சுராதீங்க..” - 'பகீர்' கொடுத்த முதல்வர் விஜய்.. அந்த பைலில் அப்படி என்ன இருக்கு?
அனைத்து எம்எல்ஏ.,வுக்கும் கார், மதுரையில் புற்றுநோய் மருத்துவமனை…முதல்வர் வெளியிட்ட 10 அறிவிப்புகள்
அடிக்க ஓங்கிய திமுக எம்எல்ஏ.. சட்டசபையில் ஆவேசமாக கொந்தளித்த அமைச்சர் ராஜ்மோகன்!
தென்னிந்திய முதல்வர்கள் மாநாடு: துணைத் தலைவராக முதல்வர் விஜய் நியமனம்
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: அபார வெற்றி பெற்று இந்தியா சாதனை
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
மாணவர் போராட்டம் தொடர்பான சுற்றறிக்கை: வெடித்தது எதிர்ப்பு... வாபஸ் பெற்றது தமிழக அரசு!
"பாடிளம் பூதத்தினானும் பவளச் செவ்வாய்வண்ணத்தானும்".. திருநாவுக்கரசர் வரலாறு
கவன ஈர்ப்பு தீர்மானம் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
{{comments.comment}}