வெளுத்து வாங்கும் வெயில்.. 1 டூ 5ம் வகுப்புக்கு.. இறுதித் தேர்வுகளை 17ம் தேதியுடன் முடிக்க உத்தரவு!

Mar 30, 2025,04:59 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் வெயில் தாக்கம் கடுமையாக இருப்பதால் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியருக்கு இறுதித் தேர்வை முன் கூட்டியே முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


தமிழ்நாடு முழுவதும் வெயில் கடுமையாக உள்ளது. கடுமையான வெயில் அடித்து வருவதால் வெளியில் தலை காட்ட முடியவில்லை. அதிலும் தற்போது பரீட்சை காலம் என்பதால் பிற்பகலில் தேர்வு எழுதச் செல்வோர் கடும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர். இதனால் பெற்றோர்களும் தங்களது பிள்ளைகள் படும் கஷ்டத்தைக் கண்டு அவதிக்குள்ளாகியுள்ளனர்.


தற்போது பிளஸ்டூ பரீட்சை முடிந்து விட்டது. பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்கி நடந்து வருகின்றன. இதுதவிர 1 முதல் 5ம் வகுப்புகளுக்குரிய இறுதித் தேர்வுகள் ஏப்ரல் 9ம் தேதி தொடங்கி ஏப்ரல் 21ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 8ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.




ஆனால் தற்போது வெயில் கடுமையாக அடித்து வருவதால் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியருக்கான இறுதித் தேர்வை முன்கூட்டியே முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி இவர்களுக்கு 21ம் தேதிக்குப் பதில், 17ம் தேதியடன் இறுதித் தேர்வுகள் முடிவடையவுள்ளன. இவர்களுக்கான தேர்வும் கூட ஏப்ரல் 9ம் தேதிக்குப் பதில் 7ம் தேதியே தொடங்கவுள்ளது. இந்த மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறையும் விடப்படவுள்ளது.


புதிய தேர்வு அட்டவணையையும் தொடக்கக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அந்த புதிய அட்டவணை விவரம்:


1 முதல் 3ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் 12 மணி வரை தேர்வு நடைபெறும்.  இவர்களுக்கு 7ம் தேதி தமிழ், 8ம் தேதி விருப்ப மொழி, 9ம் தேதி ஆங்கிலம், 11ம் தேதி கணக்கு தேர்வுகள் நடைபெறும். 


4ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு 7ம் தேதி தமிழ், 8ம் தேதி விருப்ப மொழி, 9ம் தேதி ஆங்கிலம், 11ம் தேதி கணக்கு, 15ம் தேதி அறிவியல், 17ம் தேதி சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்