வெளுத்து வாங்கும் வெயில்.. 1 டூ 5ம் வகுப்புக்கு.. இறுதித் தேர்வுகளை 17ம் தேதியுடன் முடிக்க உத்தரவு!

Mar 30, 2025,04:59 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் வெயில் தாக்கம் கடுமையாக இருப்பதால் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியருக்கு இறுதித் தேர்வை முன் கூட்டியே முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


தமிழ்நாடு முழுவதும் வெயில் கடுமையாக உள்ளது. கடுமையான வெயில் அடித்து வருவதால் வெளியில் தலை காட்ட முடியவில்லை. அதிலும் தற்போது பரீட்சை காலம் என்பதால் பிற்பகலில் தேர்வு எழுதச் செல்வோர் கடும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர். இதனால் பெற்றோர்களும் தங்களது பிள்ளைகள் படும் கஷ்டத்தைக் கண்டு அவதிக்குள்ளாகியுள்ளனர்.


தற்போது பிளஸ்டூ பரீட்சை முடிந்து விட்டது. பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்கி நடந்து வருகின்றன. இதுதவிர 1 முதல் 5ம் வகுப்புகளுக்குரிய இறுதித் தேர்வுகள் ஏப்ரல் 9ம் தேதி தொடங்கி ஏப்ரல் 21ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 8ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.




ஆனால் தற்போது வெயில் கடுமையாக அடித்து வருவதால் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியருக்கான இறுதித் தேர்வை முன்கூட்டியே முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி இவர்களுக்கு 21ம் தேதிக்குப் பதில், 17ம் தேதியடன் இறுதித் தேர்வுகள் முடிவடையவுள்ளன. இவர்களுக்கான தேர்வும் கூட ஏப்ரல் 9ம் தேதிக்குப் பதில் 7ம் தேதியே தொடங்கவுள்ளது. இந்த மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறையும் விடப்படவுள்ளது.


புதிய தேர்வு அட்டவணையையும் தொடக்கக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அந்த புதிய அட்டவணை விவரம்:


1 முதல் 3ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் 12 மணி வரை தேர்வு நடைபெறும்.  இவர்களுக்கு 7ம் தேதி தமிழ், 8ம் தேதி விருப்ப மொழி, 9ம் தேதி ஆங்கிலம், 11ம் தேதி கணக்கு தேர்வுகள் நடைபெறும். 


4ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு 7ம் தேதி தமிழ், 8ம் தேதி விருப்ப மொழி, 9ம் தேதி ஆங்கிலம், 11ம் தேதி கணக்கு, 15ம் தேதி அறிவியல், 17ம் தேதி சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தனியா.. கெத்தா.. மாமல்லபுரத்தில் சொன்னது போல நடக்கப் போகிறாரா விஜய்?

news

விஜய் உடன் சேர்ந்தால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்...ஆரூடம் சொல்லும் எஸ்ஏசி

news

கண்களின் பார்வையில்.. காதல் கொண்டேனே!

news

25 சீட்டுதானா.. அல்லது கூடுதலாக கிடைக்குமா.. எதிர்பார்ப்பில் காங்கிரஸ்.. என்ன நடக்கும்?

news

இந்தியாவின் பொருளாதாரம் சீராக உள்ளது...பட்ஜெட் தொடர் உரையில் ஜனாதிபதி பெருமிதம்

news

தென்றலே... என் தொலைந்து போன நிழலே!

news

இந்தியா பக்கம் வராதீங்க.. அப்புறம் அடி தாங்கமாட்டீங்க!.. பாக். அணிக்கு ஸ்ரீகாந்த் எச்சரிக்கை!

news

சேலம் அங்காள பரமேஸ்வரி ஆலயம் மாசி திருவிழா கொடியேற்றம் கோலாகலம்!

news

அடிமட்ட மக்களுடன் நெருக்கமாக இருந்தவர் அஜீத் பவார்.. பிரதமர் மோடி இரங்கல்

அதிகம் பார்க்கும் செய்திகள்