வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

Oct 24, 2025,05:12 PM IST

சென்னை: வங்கக் கடலில் மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் மூலம் எந்த அளவுக்கு நமக்கு மழை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


நடப்பு மழைக்காலத்தில்  வங்கக் கடலில் உருவாகியுள்ள 2வது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இதுவாகும். முதல் தாழ்வுப் பகுதி புயலாக மாறுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. பரவலாக மழையை மட்டுமே அது தந்து சென்றது. இந்த நிலையில் இன்று உருவாகியுள்ள தாழ்வு, உயர்ந்த மழையைத் தருமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இது புயலாக மாறக் கூடும் என்று முன்கூட்டியே கணிக்கப்பட்டுள்ளது.




தென்கிழக்கு வங்கக் கடலில் இந்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. தெற்கு அந்தமான் பகுதியில் இது உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வட மேற்கு திசையில் நகர்ந்து வலுவடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


இது தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளுக்கு நல்ல மழையைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நகரும் விதம், திசை, வேகம் ஆகியவற்றைப் பொறுத்தே இதனால் நமக்கு என்னெல்லாம் சாதகம், பாதகம் என்பது தெரிய வரும். சென்னையைப் பொறுத்தவரை காலையிலிருந்தே மேக மூட்டமாக காணப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்