சென்னை: வங்கக் கடலில் மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் மூலம் எந்த அளவுக்கு நமக்கு மழை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நடப்பு மழைக்காலத்தில் வங்கக் கடலில் உருவாகியுள்ள 2வது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இதுவாகும். முதல் தாழ்வுப் பகுதி புயலாக மாறுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. பரவலாக மழையை மட்டுமே அது தந்து சென்றது. இந்த நிலையில் இன்று உருவாகியுள்ள தாழ்வு, உயர்ந்த மழையைத் தருமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இது புயலாக மாறக் கூடும் என்று முன்கூட்டியே கணிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் இந்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. தெற்கு அந்தமான் பகுதியில் இது உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வட மேற்கு திசையில் நகர்ந்து வலுவடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இது தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளுக்கு நல்ல மழையைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நகரும் விதம், திசை, வேகம் ஆகியவற்றைப் பொறுத்தே இதனால் நமக்கு என்னெல்லாம் சாதகம், பாதகம் என்பது தெரிய வரும். சென்னையைப் பொறுத்தவரை காலையிலிருந்தே மேக மூட்டமாக காணப்படுகிறது.
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}