சென்னை: வங்கக் கடலில் மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் மூலம் எந்த அளவுக்கு நமக்கு மழை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நடப்பு மழைக்காலத்தில் வங்கக் கடலில் உருவாகியுள்ள 2வது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இதுவாகும். முதல் தாழ்வுப் பகுதி புயலாக மாறுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. பரவலாக மழையை மட்டுமே அது தந்து சென்றது. இந்த நிலையில் இன்று உருவாகியுள்ள தாழ்வு, உயர்ந்த மழையைத் தருமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இது புயலாக மாறக் கூடும் என்று முன்கூட்டியே கணிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் இந்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. தெற்கு அந்தமான் பகுதியில் இது உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வட மேற்கு திசையில் நகர்ந்து வலுவடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இது தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளுக்கு நல்ல மழையைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நகரும் விதம், திசை, வேகம் ஆகியவற்றைப் பொறுத்தே இதனால் நமக்கு என்னெல்லாம் சாதகம், பாதகம் என்பது தெரிய வரும். சென்னையைப் பொறுத்தவரை காலையிலிருந்தே மேக மூட்டமாக காணப்படுகிறது.
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}