கவரைப்பேட்டை ரயில் விபத்து.. இதுதான் காரணமா.. தொடரும் விசாரணை.. பகீர் தகவல்கள்!

Oct 17, 2024,02:48 PM IST

சென்னை : கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணையில் பல அதிர்ச்சி அளிக்கும் வகையிலான தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன.


திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே கடந்த வாரம் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது  பக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இது 19 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த விபத்தால் ரயில் பாதை மோசமாக சேதமடைந்தது. சுமார் 13 பெட்டிகள் தடம் புரண்டது. இந்த விபத்தின் மீட்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், ரயில் விபத்து குறித்து தீவிர விசாரைண நடத்தப்பட்டு வருகிறது. இன்றும் 15 ரயில்வே ஊழியர்களிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.


இந்த விசாரணையில் வெளியான தகவல்களின் படி, தொழில்நுட்ப கோளாறு ஏதும் ஏற்படவில்லை என்பது உறுதியாகி உள்ளது. மேலும் தண்டவாளத்தில் நட்டு, போல்ட் கழற்றப்பட்டதாலேயே விபத்து நிகழ்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 




விபத்தின் தீவிரத்தை குறைக்கும் வகையில் பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் வடிவமைக்கப்பட்டு இருந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் போலீசார் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.


திருட்டுக் கும்பல்தான் காரணமா?


இரும்பு திருடும் கும்பல், திருடிய இரும்பை போடும் கடைகள் என பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.  ரயில்வே ஊழியர்களை தொடர்ந்து இன்னும் சிலரிடமும் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


லோகோ பைலட், ஸ்டேஷன் மாஸ்டர், டெக்னீக்கல் டீம், சிக்னல் டீம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 15 ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இரும்பு திருடும் கும்பல்களால் ரயில் பயணிகளின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது பகீர் கிளப்பி உள்ளது.


பல பகுதிகளில் தண்டவாளங்களையே திருடிச் சென்று விடுவார்கள். ரயில்வே இடங்களில் குறிப்பாக ரயில் நிலையங்களுக்கு அருகே தண்டவாளங்கள், தண்டவாளக் கட்டைகள் உள்ளிட்டவை அப்படி அப்படியே போடப்பட்டிருக்கும். இதைத் திருடும் கும்பல்களும் உள்ளன. அப்படி ஏதாவது ஒரு கும்பல் செய்த வேலையா இது என்றும் சந்தேகப்படுகிறதாம் காவல்துறை. முழு விசாரணைக்குப் பிறகே தெளிவு கிடைக்கும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கடவுளால் அழகாக வடிவமைக்கப்பட்டவர்கள்.. WOMEN EMPOWERMENT

news

அப்பாவுக்குப் பிறந்த நாள்.. Happy Birthday to my dear Dad!

news

கூட்டை உடைத்து வெளியே வந்த சுதந்திரப் பெண்கள்.. Women broke the shell

news

சிபிஐ சம்மன்...மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

"ம்ம்... என்னச் சொல்லப் போறானோ? மதன்".. அவளின் (ல்) அவன் (5)

news

திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?

news

TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?

news

விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடப்பதில் சிக்கல்

அதிகம் பார்க்கும் செய்திகள்