"பாஜகவுடன் இணைய என்னை கட்டாயப்படுத்துகிறார்கள்".. கெஜ்ரிவால்  பரபரப்பான குற்றச்சாட்டு..!

Feb 05, 2024,08:34 PM IST

புதுடெல்லி:  தன்னை பாஜகவில் சேர வற்புறுத்துவதாகவும், அவர்களது அழுத்தங்களுக்குப் பணிந்து, நான் பாஜகவுடன் ஒருபோதும் சேரப் போவதில்லை எனவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால்.


மத்திய அரசு எங்களுக்கு எதிராக என்ன சதி செய்ய முயன்றாலும் நான் அடிப்பணிய மாட்டேன் எனவும் அவர் கடுமையாக கூறியுள்ளார்.


டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான கெஜ்ரிவால்  ஊழலுக்கு எதிரான ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்ற கொள்கையுடன் அரசியலுக்கு வந்தவர். இன்று டெல்லி முதல்வராக அவர் இருக்கிறார். அருகில் உள்ள பஞ்சாப் மாநிலத்திலும் ஆம் ஆத்மியே ஆட்சி நடத்தி வருகிறது. டெல்லியில்  இரண்டு முறை முதல்வராக பதவி வகித்துள்ள கெஜ்ரிவாலுக்கும், மத்திய அரசுக்கும் இடையே  முட்டல் மோதல் இருந்து வருகிறது. ஆளுநருக்கும், கெஜ்ரிவாலுக்கும் தொடர்ந்து மோதல் இருந்து வருகிறது. 




மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை ஐந்து முறை ஆஜராக சமன் அனுப்பி இருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதன் காரணமாக அமலாக்க துறையினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை வரும் 7 ஆம் தேதி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.  


இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் 7 எம்எல்ஏக்களிடம் பாஜக ரூபாய் 25 கோடி பேரம் பேசுவதாக கெஜ்ரிவால் பரபரப்பான புகாரைக் கூறியிருந்தார். இந்த நிலையில் தன்னை பாஜகவில் சேருமாறு அழுத்தம் தருவதாக கெஜ்ரிவால் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பாஜகவுடன் ஒரு போதும் சேரப் போவதில்லை. மத்திய அரசு எங்களுக்கு எதிராக என்ன சதி செய்ய முயன்றாலும் நான் அடிபணிய மாட்டேன். 

பள்ளி, மருத்துவமனைக்கு மத்திய அரசு பட்ஜெட்டில் 4 சதவீதம் மட்டுமே செலவு செய்கிறது. ஆனால் டெல்லி அரசு ஒவ்வொரு ஆண்டும் பள்ளி, மருத்துவமனைகளுக்கு பட்ஜெட்டில் 40 சதவீதம் செலவு செய்கிறது என அரவிந்த் கெஜ்ரிவால் பேசியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

2026 தேர்தலிலும் திமுக.,வுக்கு தான் வெற்றி...முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

news

ஒரே நாளில் 30,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய அமேசான்

news

தங்கம் நேற்றைய விலையை தொடர்ந்து இன்றும் குறைவு... அதுவும் சவரனுக்கு ரூ. 1,200 குறைவு!

news

தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் கமிஷன்...இன்று முதல் பயிற்சி ஆரம்பம்

news

மக்களே உஷார்...இன்று இரவு கரையை கடக்கிறது மோன்தா புயல்

news

திருச்செந்தூரில் நடைபெறும் சாயா அபிஷேகம் பற்றி தெரியுமா?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 28, 2025... இன்று வெற்றிகள் தேடி வரும் ராசிகள்

news

தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் SIR... நவ 2ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நெருங்கும் மோன்தா புயல்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!

அதிகம் பார்க்கும் செய்திகள்