- கவிதா அறிவழகன்
சூரியனின் ஒளிக்கதிர்களும்,
நிலவின் வெண்மதியும்
சேர்ந்து வாழும் வாழ்க்கையே
ஆதர்ஷமாகும்.
அந்த இரண்டும்
ஓருயிராய் உதிக்கும்
ஒளியே
ஆதர்ஷமாகும்.
வானில் அந்த ஒளி,
மண்ணில் இந்த உணர்வு;
இதைக் கற்றுக்கொள்ள
புத்தகமும், ஊடகமும்
தேவையில்லை…

நம்மைச் சுற்றி
நடப்பவற்றை வைத்துப்
பின்பற்றத் தோன்றும்
ஒளியே அது.
ஆதர்ஷம் என்றால்
ஒருவர் மற்றொருவரின்
உணர்வுகளைப் புரிந்து கொண்டு
செயல்படும் ஒளியானது.
இது உணர்வுபூர்வமானது…
இதில் சத்தமில்லை
மௌனத்தினால்
மனம் கோர்க்கும்
மகாசக்தி அது.
சத்தமாகப் பேசத் தெரியாது,
சாதனைகள் புரியத் தெரியாது…
ஆனால்,
மற்றவருக்கு எடுத்துக்காட்டாக
வாழத் தெரியும்.
ஆதர்ஷம் என்பது
மற்றவர்களின் செயல்களை நிழலாய்ப்
பின்பற்றுவது அல்ல,
சுற்றி இருக்கும் சூழல்களைக் கொண்டு
நம்மை நாமே
வளர்த்துக் கொள்வது
ஓர் அழகிய ஒளி.
காலம் கடந்தும்
கரையாத
காவியம் அது.
ஒருநாள்…
என்றாவது ஒரு நாள்,
மீண்டும்
அந்த ஒளி பிறக்கும்.
(Kavitha Arivalagan, Creative writers, Dharmapuri)
Akshaya Tritiya 2026: அட்சய திருதியை.. எப்போது சாமி கும்பிடலாம்.. பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?
Kanakathara Sthothram: அட்சய திருதியை.. ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் படிப்போம்!
அட்சய திருதியை.. சித்திரை மாத பொன்னான நாளிது.. மூன்றாம் பிறையில் வரும் நாளிது!
அட்சய திருதியை அன்று...இதை வைத்துப் பூஜை செய்வோம்.. காலத்தின் அவசியம் இது!
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
{{comments.comment}}