ஆதர்ஷம்

Apr 15, 2026,12:38 PM IST

- கவிதா அறிவழகன்


சூரியனின் ஒளிக்கதிர்களும்,

நிலவின் வெண்மதியும்

சேர்ந்து வாழும் வாழ்க்கையே

ஆதர்ஷமாகும்.


அந்த இரண்டும்

ஓருயிராய் உதிக்கும்

ஒளியே

ஆதர்ஷமாகும்.


வானில் அந்த ஒளி,

மண்ணில் இந்த உணர்வு;


இதைக் கற்றுக்கொள்ள

புத்தகமும், ஊடகமும்

தேவையில்லை…




நம்மைச் சுற்றி

நடப்பவற்றை வைத்துப்

பின்பற்றத் தோன்றும்

ஒளியே அது.


ஆதர்ஷம் என்றால்

ஒருவர் மற்றொருவரின்

உணர்வுகளைப் புரிந்து கொண்டு 

செயல்படும் ஒளியானது.


இது உணர்வுபூர்வமானது…

இதில் சத்தமில்லை

மௌனத்தினால்

மனம் கோர்க்கும்

மகாசக்தி அது.


சத்தமாகப் பேசத் தெரியாது,

சாதனைகள் புரியத் தெரியாது…

ஆனால்,

மற்றவருக்கு எடுத்துக்காட்டாக

வாழத் தெரியும்.


ஆதர்ஷம் என்பது

மற்றவர்களின் செயல்களை நிழலாய்ப் 

பின்பற்றுவது அல்ல,

சுற்றி இருக்கும் சூழல்களைக் கொண்டு

நம்மை நாமே

வளர்த்துக் கொள்வது

ஓர் அழகிய ஒளி.


காலம் கடந்தும்

கரையாத

காவியம் அது.


ஒருநாள்…

என்றாவது ஒரு நாள்,

நாம் யாரோ ஒருவருக்காக

ஆதர்ஷமாக மாறும்போது

மீண்டும்

அந்த ஒளி பிறக்கும்.


(Kavitha Arivalagan, Creative writers, Dharmapuri)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

DMK Introspection: தேர்தலில் தோற்றது ஏன்? .. திமுக கள ஆய்வு ரிப்போர்ட் தந்த அதிர்ச்சி தகவல்

news

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில்.. கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் சுவாமி தரிசனம்!

news

தகுதி நீக்கமா? ராஜினாமா செய்த 4 எம்எல்ஏ.,க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்!

news

ஸ்டிக்கர் ஒட்டிய சோஃபா மாடல் அரசு - முதல்வர் விஜய் மீது உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு

news

தமிழ்நாடு எம்எல்ஏக்களுக்கு 2 நாள் பயிற்சி வகுப்பு: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!

news

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

news

ஆளே இல்லாத கடையில டீ ஆத்துவது போல...தமிழக அரசை விமர்சித்த திமுக தலைவர் ஸ்டாலின்

news

பைக் டாக்ஸி: தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? உயர்நீதிமன்ற கிளை கேள்வி!

news

அரசியலுக்கு வரவா? வேண்டாமா?.. நீங்களே சொல்லுங்க பார்ப்போம்.. மக்களிடம் கேட்கும் ராகவா லாரன்ஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்