ஊட்டி: ஒற்றை யானை சுற்றித் திரிவதால் தொட்டபெட்டா காட்சி முனை பகுதிக்கு, சுற்றுலா பயணிகள் இன்று ஒரு நாள் மட்டும் செல்ல தடை விதித்துள்ளது தமிழ்நாடு வனத்துறை.
தமிழகத்தில் கோடை காலம் துவங்கி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அக்னி நட்சத்திரம் தொடங்கி வெயிலின் தாக்கம் மேலும் உச்சமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் குளுமையான இடங்களில் சுற்றுலா செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.அதே சமயத்தில் கோடை விடுமுறை நாள் என்பதாலும் பெருமளவில் மக்கள் சுற்றுலா செல்ல திட்டமிட்டு வருகின்றனர். அந்த வகையில் மக்கள் இயற்கையின் அழகை ரசிப்பதற்காகவும், குளுமையான சூழ்நிலையை கொண்டாடுவதற்காகவும் ஏராளமான மக்கள் ஊட்டி செல்கின்றனர்.

இதற்கிடையே சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காகவும், மாசுக்கட்டுப்பாட்டை குறைக்கவும், ஊட்டி வரும் சுற்றுலாப் பயணிகளிடையே தமிழக அரசு இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்திற்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக வனத்துறை.
அதன்படி, தொட்டபெட்டா காட்சி முனை பகுதிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏனெனில் ஒற்றை காட்டி யானை அப்பகுதிகளில் உலா வருவதால் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.
தொட்டபெட்டா காட்சி முனைப் பகுதி அருகே ஒற்றை காட்டு யானையை தஞ்சம் அடைந்துள்ளதால் தொடர்ந்து ட்ரோன் மூலம் கண்காணித்து வருகிறது வனத்துறை. மேலும் இந்த யானையை பிடித்து வனப்பகுதிக்குள் அனுப்ப 40 பேர் கொண்ட குழு அமைத்து தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}