சுற்றித் திரியும் ஒற்றை யானை.. காட்டுக்குள் அனுப்ப வனத்துறை தீவிரம்.. தொட்டபெட்டா செல்ல இன்று தடை!

May 06, 2025,10:33 AM IST

ஊட்டி:   ஒற்றை யானை சுற்றித் திரிவதால் தொட்டபெட்டா காட்சி முனை பகுதிக்கு, சுற்றுலா பயணிகள் இன்று ஒரு நாள் மட்டும் செல்ல தடை விதித்துள்ளது தமிழ்நாடு வனத்துறை.


தமிழகத்தில் கோடை காலம் துவங்கி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அக்னி நட்சத்திரம் தொடங்கி வெயிலின் தாக்கம் மேலும் உச்சமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் குளுமையான இடங்களில் சுற்றுலா செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.அதே சமயத்தில் கோடை விடுமுறை நாள் என்பதாலும் பெருமளவில் மக்கள் சுற்றுலா செல்ல திட்டமிட்டு வருகின்றனர். அந்த வகையில் மக்கள் இயற்கையின் அழகை ரசிப்பதற்காகவும், குளுமையான சூழ்நிலையை கொண்டாடுவதற்காகவும் ஏராளமான மக்கள் ஊட்டி செல்கின்றனர். 




இதற்கிடையே சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காகவும், மாசுக்கட்டுப்பாட்டை குறைக்கவும், ஊட்டி வரும் சுற்றுலாப் பயணிகளிடையே தமிழக அரசு இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்திற்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக வனத்துறை. 


அதன்படி, தொட்டபெட்டா காட்சி முனை பகுதிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏனெனில் ஒற்றை காட்டி யானை அப்பகுதிகளில் உலா வருவதால் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.


தொட்டபெட்டா காட்சி முனைப் பகுதி அருகே ஒற்றை காட்டு யானையை தஞ்சம் அடைந்துள்ளதால் தொடர்ந்து ட்ரோன் மூலம் கண்காணித்து வருகிறது வனத்துறை. மேலும் இந்த யானையை பிடித்து வனப்பகுதிக்குள் அனுப்ப 40 பேர் கொண்ட குழு அமைத்து தீவிரமாக முயற்சி  செய்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கோவை கொடூரம்.. கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு.. முதல்வர் விஜய்

news

அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம்: அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனிடம் கோரிக்கை!

news

South West Monsoon: தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: சென்னையில் சட்டென மாறிய வானிலை

news

Chettinadu Recipe: தேன் போல தித்திக்கும்.. மாம்பழ குல்ஃபி ஐஸ்!

news

கோவை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. அதிர்ச்சியில் தமிழ்நாடு.. அனைத்துக் கட்சிகளும் கடும் கண்டனம்

news

தவெக அரசில் சேர முடியாமல் போச்சே.. தனிச் சின்னத்தில் போட்டியிடாததால் வருந்தும் கட்சிகள்?

news

மே 23 ஆமைகள் தினம்.. மாணவர்களுக்கான நீதி கதை.. "கடைசியாக வந்த கோமதி"

news

Kalaimani: சிந்தனை.. எப்போது வெற்றி கிட்டும்!

news

Tamil Poem by Sasikala Viswanathan: அவலம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்