"கேலி பண்றாங்க.. எங்களுக்கு பென்ஷன் கொடுங்க".. வழுக்கையால் பாதிக்கப்பட்டோர் அதிரடி!

Jan 09, 2023,11:25 AM IST
ஹைதராபாத்: வழுக்கைத் தலை கொண்டோர் சேர்ந்து தெலங்கானாவில் ஒரு சங்கம் அமைத்துள்ளனர். பல்வேறு மன உளைச்சல்களுக்கு தாங்கள் ஆளாவதால், அரசு தங்களுக்கு மாதந்தோறும் ரூ. 6000 ஓய்வூதியமாக தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம் சித்திப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தங்கலப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த வழுக்கையால் பாதிக்கப்பட்ட சிலர் சேர்ந்து குழுவாக இயங்கி வருகின்றனர்.இவர்கள் மாநில அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர்.

அதில் முக்கியமானது, தங்களுக்கு வழுக்கைத் தலை இருப்பதால் பலரின் கேலி கிண்டல்களுக்கு இலக்காகிறோம். இதனால் மன உளைச்சல் ஏற்படுகிறது.  இதனால் சரியான முறையில் வேலைக்கும் போக முடிவதில்லை. எனவே அரசு எங்களுக்கு மாதந்தோறும் ரூ. 6000 ஓய்வூதியமாக தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.



சங்கராந்தியையொட்டி இந்த ஓய்வூதியத்தை அறிவித்து எங்களை அரசு மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ஜனவரி 5ம் தேதி இவர்கள் தங்களது ஊரில் கூட்டம் ஒன்றை நடத்தினர். அடுத்து சங்கராந்தி அன்றும் கூட்டம் போடவுள்ளனராம்.  அப்போது மேலும் பலர் தங்களுடன் வந்து இணைவார்கள் என்று இவர்கள் தெரிவித்தனர்.

இந்த அமைப்பைச் சேர்ந்த அஞ்சி என்பவர் கூறுகையில், பலரும் எங்களது தலையைப் பார்த்து சிரிக்கிறார்கள். முடி  கொட்டிப் போனால் அதற்கு நாங்களா பொறுப்பு..  இது இயற்கையாக நடப்பது.. இப்படிக் கேலி செய்வதால் மனம் வலிக்கிறது. எதற்கெடுத்தாலும் எங்களை கேலி செய்கிறார்கள் என்றார் விரக்தியாக.

சமீபத்திய செய்திகள்

news

வாரத்தின் கடைசி நாளான இன்று... எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை!

news

பாட்டாளி மக்கள் கட்சி என்பது தனிப்பட்ட நபரின் சொத்து கிடையாது: அன்புமணி ராமதாஸ்!

news

கூடல் மாநகரில் கூடுகிறது கழகப் பொதுக்குழு.. பொதுத் தேர்தலில் வென்றிடுவோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஈடில்லாத மாபெரும் கலைஞன் கமல்ஹாசன்.. அவரை சிறுமைப்படுத்துவதா?.. நடிகர் சங்கம் கண்டனம்

news

மாநிலங்களவை சீட் ஒதுக்கியதற்கு.. முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமலஹாசன்!

news

அன்புமணிக்கு பக்க பலமாகும்.. செளமியா அன்புமணி, 3 மகள்கள்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!

news

பாமக பொருளாளர் திலகபாமாவை நீக்கிய டாக்டர் ராமதாஸ்.. தொடர்வார் என்று அறிவித்தார் அன்புமணி!

news

அன்புதானே எல்லாம்.. பாமகவின் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 23 மா.செக்களில் 22 பேர் வருகை!

news

வண்டி வண்டியாக கொண்டு வந்து கொட்டப் போறாங்க.. என்ன பண்ணப் போறீங்க?.. விஜய் கேள்வி

அதிகம் பார்க்கும் செய்திகள்