"கேலி பண்றாங்க.. எங்களுக்கு பென்ஷன் கொடுங்க".. வழுக்கையால் பாதிக்கப்பட்டோர் அதிரடி!

Jan 09, 2023,11:25 AM IST
ஹைதராபாத்: வழுக்கைத் தலை கொண்டோர் சேர்ந்து தெலங்கானாவில் ஒரு சங்கம் அமைத்துள்ளனர். பல்வேறு மன உளைச்சல்களுக்கு தாங்கள் ஆளாவதால், அரசு தங்களுக்கு மாதந்தோறும் ரூ. 6000 ஓய்வூதியமாக தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம் சித்திப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தங்கலப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த வழுக்கையால் பாதிக்கப்பட்ட சிலர் சேர்ந்து குழுவாக இயங்கி வருகின்றனர்.இவர்கள் மாநில அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர்.

அதில் முக்கியமானது, தங்களுக்கு வழுக்கைத் தலை இருப்பதால் பலரின் கேலி கிண்டல்களுக்கு இலக்காகிறோம். இதனால் மன உளைச்சல் ஏற்படுகிறது.  இதனால் சரியான முறையில் வேலைக்கும் போக முடிவதில்லை. எனவே அரசு எங்களுக்கு மாதந்தோறும் ரூ. 6000 ஓய்வூதியமாக தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.



சங்கராந்தியையொட்டி இந்த ஓய்வூதியத்தை அறிவித்து எங்களை அரசு மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ஜனவரி 5ம் தேதி இவர்கள் தங்களது ஊரில் கூட்டம் ஒன்றை நடத்தினர். அடுத்து சங்கராந்தி அன்றும் கூட்டம் போடவுள்ளனராம்.  அப்போது மேலும் பலர் தங்களுடன் வந்து இணைவார்கள் என்று இவர்கள் தெரிவித்தனர்.

இந்த அமைப்பைச் சேர்ந்த அஞ்சி என்பவர் கூறுகையில், பலரும் எங்களது தலையைப் பார்த்து சிரிக்கிறார்கள். முடி  கொட்டிப் போனால் அதற்கு நாங்களா பொறுப்பு..  இது இயற்கையாக நடப்பது.. இப்படிக் கேலி செய்வதால் மனம் வலிக்கிறது. எதற்கெடுத்தாலும் எங்களை கேலி செய்கிறார்கள் என்றார் விரக்தியாக.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்