சென்னை: கன்னடத் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரான கேவிஎன் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய்யின் கடைசி படம் உருவாகவுள்ளது.
விஜய்யின் கடைசிப் படத்தை தமிழ்த் தயாரிப்பாளர் யாராவது தயாரிப்பார்கள் என்று பார்த்தால் கன்னடத் தயாரிப்பாளருக்கு அந்தப் படம் போயுள்ளது ஒரு பக்கம் ஏமாற்றத்தைக் கொடுத்தாலும் கூட, ரசிகர்கள் இந்த அறிவிப்பைக் கொண்டாடி வருகின்றனர்.
விஜய்யின் 69வது பட அறிவிப்பை கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் வித்தியாசமான முறையில் வெளியிட்டுள்ளது. படம் குறித்த இதர விவரங்கள் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் இசையமைப்பாளராக அனிருத் புக் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. சிம்ரன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. பிற விவரங்கள் நாளை தெரிய வரலாம்.

கேவிஎன் புரடக்ஷன்ஸ் என்பது பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட தயாரிப்பு, நிதி மற்றும் விநியோக நிறுவனமாகும். தளபதி 69 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை தயாரிக்கும் இந்த நிறுவனத்தை வெங்கட் கே நாராயண் மற்றும் நிஷா வெங்கட் கோணங்கி ஆகியோர் இணைந்து நடத்தி வருகின்றனர்.
2021ம் ஆண்டு முதல் இந்த நிறுவனம் படத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. சக்கத் என்ற படத்தை முதலில் இது தயாரித்து வெளியிட்டது. இதையடுத்து பைடூ லவ் என்ற படத்தைத் தயாரித்தனர். புதிய திறமையாளர்களுக்கு வாய்ப்பளிப்பதே தங்களது முதல் நோக்கம் என்று இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொகரு மற்றும் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்திற்கு இந்த நிறுவனம் பைனான்ஸும் செய்துள்ளது. விக்ராந்த் ரோனா, 777 சார்லி, சப்தசாகரச்சே எல்லோ, அவதார புருஷா பார்ட் 1, 2, தொட்டாபுரி பார்ட் 1, 2 ஆகிய படங்களுக்கும் இந்த நிறுவனம் பைனான்ஸ் செய்துள்ளது.
தற்போது விஜய் படத்தைத் தயாரிப்பதன் மூலம் இந்திய சினிமா உலகில் கேவிஎன் புரடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு மிகப் பெரிய வெளிச்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அந்த நிறுவனம் உள்ளது. சூர்யா நடிப்பில் பிரமாண்டமாக தயாராகியுள்ள கங்குவா படத்தை கர்நாடகத்தில் திரையிடும் உரிமையை கேவிஎன்தான் வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்துக்கு பைனான்ஸும் கேவிஎன் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
5 தலைநகரங்கள், சாதியற்ற இட ஒதுக்கீடு" - நாம் தமிழர் தேர்தல் அறிக்கை 2026 ஐ வெளியிட்டார் சீமான்
எந்த சின்னத்தில் போட்டி? திமுக-மக்கள் நீதி மய்யம் இடையே தொடரும் இழுபறி
எங்களுடன் ஒப்பிட்டு தொகுதி கேட்காதீங்க...செல்வ பெருந்தகை வேண்டுகோள்
ஆதவ் அர்ஜுனா யாரென்றே தெரியாது - நயினார் நாகேந்திரன் அதிரடி
போக்குவரத்து, மின்வாரியம் உள்ளிட்ட அத்தியாவசியத் துறை ஊழியர்கள் தபால் ஓட்டு போடலாம்
கோடை விடுமுறை: 50 சிறப்பு ரயில்களை அறிவித்தது தெற்கு ரயில்வே
20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு
புதுச்சேரி கூட்டணி விவகாரம்...டில்லியில் ராகுல் தலைமையில் காங்கிரஸ் ஆலோசனை
ஏப்ரல் 23-ம் தேதி தமிழகத்தில் பொதுவிடுமுறை - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
{{comments.comment}}