பெங்களூரு: பெங்களூரு டாக்டர் ராஜ்குமார் சாலையில் உள்ள மின்சார வாகன ஷோரூமில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் 20 வயதுப் பெண் பரிதாபமாக பலியானார். 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் கருகி நாசமாகின.
இன்று மாலை இந்த பெரும் தீவிபத்து நடந்தது. ஷோரூமில் உள்ள மின்சார மோட்டார் சைக்கிள்கள் பிரிவில் ஒரு ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு ஸ்கூட்டரில் இருந்த பேட்டரிகள் இதனால் வெடித்து தீப்பிடித்துக் கொண்டது. இதையடுத்து ஷோரூம் முழுக்க தீ பரவியது.
தகவல் அறிந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து போராடித் தீயை அணைத்தன. இந்த விபத்தில் அந்த ஷோரூமில் சேல்ஸ் எக்சிகியூட்டிவாக பணியாற்றி வந்த பிரியா என்ற இளம் பெண் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்தார். ஷோரூமில் இருந்த 5 ஊழியர்கள் துரிதமாக வெளியேறி உயிர் தப்பினர்.
இந்த விபத்தில் ஷோரூமில் இருந்த 40க்கும் மேற்பட்ட மின்சார வாகனங்கள் தீக்கிரையாகி விட்டன. தீவிபத்தைத் தொடர்ந்து அக்கம் பக்கத்து கடைகளில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
மின்சார வாகனங்களை விற்பனை செய்யும் இடங்களில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்க வேண்டியதன் அவசியத்தை இந்த தீவிபத்து உணர்த்தியுள்ளது. விபத்து குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}