பெங்களூரு: பெங்களூரு டாக்டர் ராஜ்குமார் சாலையில் உள்ள மின்சார வாகன ஷோரூமில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் 20 வயதுப் பெண் பரிதாபமாக பலியானார். 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் கருகி நாசமாகின.
இன்று மாலை இந்த பெரும் தீவிபத்து நடந்தது. ஷோரூமில் உள்ள மின்சார மோட்டார் சைக்கிள்கள் பிரிவில் ஒரு ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு ஸ்கூட்டரில் இருந்த பேட்டரிகள் இதனால் வெடித்து தீப்பிடித்துக் கொண்டது. இதையடுத்து ஷோரூம் முழுக்க தீ பரவியது.
தகவல் அறிந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து போராடித் தீயை அணைத்தன. இந்த விபத்தில் அந்த ஷோரூமில் சேல்ஸ் எக்சிகியூட்டிவாக பணியாற்றி வந்த பிரியா என்ற இளம் பெண் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்தார். ஷோரூமில் இருந்த 5 ஊழியர்கள் துரிதமாக வெளியேறி உயிர் தப்பினர்.
இந்த விபத்தில் ஷோரூமில் இருந்த 40க்கும் மேற்பட்ட மின்சார வாகனங்கள் தீக்கிரையாகி விட்டன. தீவிபத்தைத் தொடர்ந்து அக்கம் பக்கத்து கடைகளில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
மின்சார வாகனங்களை விற்பனை செய்யும் இடங்களில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்க வேண்டியதன் அவசியத்தை இந்த தீவிபத்து உணர்த்தியுள்ளது. விபத்து குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?
வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பாமக கட்சியும்,மாம்பழச் சின்னமும் ராமதாஸ் அவர்களுக்குத் தான் சொந்தம்: எம்எல்ஏ அருள் பரபரப்பு பேட்டி!
தேர்தலில் விஜய்-சீமானுக்கு தான் போட்டி...எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி
அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்
ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?
10 நாள் கெடு முடிந்தது.. யாருக்கு புரிய வேண்டுமோ புரியும்.. செங்கோட்டையனின் புதிய மெசேஜ்
அன்புக்கரங்கள்.. இரு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டம்.. இன்று முதல்!
{{comments.comment}}