பெங்களூரு: பெங்களூரு டாக்டர் ராஜ்குமார் சாலையில் உள்ள மின்சார வாகன ஷோரூமில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் 20 வயதுப் பெண் பரிதாபமாக பலியானார். 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் கருகி நாசமாகின.
இன்று மாலை இந்த பெரும் தீவிபத்து நடந்தது. ஷோரூமில் உள்ள மின்சார மோட்டார் சைக்கிள்கள் பிரிவில் ஒரு ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு ஸ்கூட்டரில் இருந்த பேட்டரிகள் இதனால் வெடித்து தீப்பிடித்துக் கொண்டது. இதையடுத்து ஷோரூம் முழுக்க தீ பரவியது.

தகவல் அறிந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து போராடித் தீயை அணைத்தன. இந்த விபத்தில் அந்த ஷோரூமில் சேல்ஸ் எக்சிகியூட்டிவாக பணியாற்றி வந்த பிரியா என்ற இளம் பெண் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்தார். ஷோரூமில் இருந்த 5 ஊழியர்கள் துரிதமாக வெளியேறி உயிர் தப்பினர்.
இந்த விபத்தில் ஷோரூமில் இருந்த 40க்கும் மேற்பட்ட மின்சார வாகனங்கள் தீக்கிரையாகி விட்டன. தீவிபத்தைத் தொடர்ந்து அக்கம் பக்கத்து கடைகளில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
மின்சார வாகனங்களை விற்பனை செய்யும் இடங்களில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்க வேண்டியதன் அவசியத்தை இந்த தீவிபத்து உணர்த்தியுள்ளது. விபத்து குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கோவை கொடூரம்.. கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு.. முதல்வர் விஜய்
அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம்: அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனிடம் கோரிக்கை!
South West Monsoon: தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: சென்னையில் சட்டென மாறிய வானிலை
Chettinadu Recipe: தேன் போல தித்திக்கும்.. மாம்பழ குல்ஃபி ஐஸ்!
கோவை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. அதிர்ச்சியில் தமிழ்நாடு.. அனைத்துக் கட்சிகளும் கடும் கண்டனம்
தவெக அரசில் சேர முடியாமல் போச்சே.. தனிச் சின்னத்தில் போட்டியிடாததால் வருந்தும் கட்சிகள்?
மே 23 ஆமைகள் தினம்.. மாணவர்களுக்கான நீதி கதை.. "கடைசியாக வந்த கோமதி"
Kalaimani: சிந்தனை.. எப்போது வெற்றி கிட்டும்!
Tamil Poem by Sasikala Viswanathan: அவலம்!
{{comments.comment}}