பெங்களூரு: பெங்களூரு டாக்டர் ராஜ்குமார் சாலையில் உள்ள மின்சார வாகன ஷோரூமில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் 20 வயதுப் பெண் பரிதாபமாக பலியானார். 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் கருகி நாசமாகின.
இன்று மாலை இந்த பெரும் தீவிபத்து நடந்தது. ஷோரூமில் உள்ள மின்சார மோட்டார் சைக்கிள்கள் பிரிவில் ஒரு ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு ஸ்கூட்டரில் இருந்த பேட்டரிகள் இதனால் வெடித்து தீப்பிடித்துக் கொண்டது. இதையடுத்து ஷோரூம் முழுக்க தீ பரவியது.
தகவல் அறிந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து போராடித் தீயை அணைத்தன. இந்த விபத்தில் அந்த ஷோரூமில் சேல்ஸ் எக்சிகியூட்டிவாக பணியாற்றி வந்த பிரியா என்ற இளம் பெண் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்தார். ஷோரூமில் இருந்த 5 ஊழியர்கள் துரிதமாக வெளியேறி உயிர் தப்பினர்.
இந்த விபத்தில் ஷோரூமில் இருந்த 40க்கும் மேற்பட்ட மின்சார வாகனங்கள் தீக்கிரையாகி விட்டன. தீவிபத்தைத் தொடர்ந்து அக்கம் பக்கத்து கடைகளில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
மின்சார வாகனங்களை விற்பனை செய்யும் இடங்களில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்க வேண்டியதன் அவசியத்தை இந்த தீவிபத்து உணர்த்தியுள்ளது. விபத்து குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை...தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்த சென்னை வானிலை மையம
நான்கரை ஆண்டுகளில் திமுக அமைத்த குழுக்களால் மக்களுக்குக் கிடைத்த நன்மை என்ன?: அண்ணாமலை கேள்வி
மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா 50 இலட்சம் நிதி வழங்க வேண்டும்: சீமான்!
தவெக அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது.. ஏன்னா.. உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்
சவரன் ஒரு லட்சத்தை நோக்கி உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2400 உயர்வு!
உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்.. 85வது இடத்திற்கு இறங்கியது இந்தியா.. நம்பர் 1 யார் தெரியுமா?
வெற்றிகரமாக தொடங்கிய வட கிழக்குப் பருவ மழை.. தமிழ்நாடு முழுவதும் ஜில் ஜில் கூல் கூல்!
பாதுகாப்பான தீபாவளி - பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்பு அலுவலர் விழிப்புணர்வு பேச்சு
ஏங்க! தீபாவளிக்கு முறுக்கு சுடலான்னு இருக்கேன்.. நான் கடைக்கு போயி சுத்தியல் வாங்கிட்டு வந்திடுறேன்
{{comments.comment}}