அடிக்கடி ஹோட்டலில் "சந்தித்த" காதல் ஜோடி.. அடுத்தது நடந்ததைப் பாருங்கள்!

Sep 16, 2023,03:55 PM IST

பெங்களூரு: மக்களே உஷார்.. நீங்கள் வெளியே செல்லும்போது அங்கு சூழ்நிலை எப்படி உள்ளது என்பதை அறியாமல் அசட்டையாக இருந்தால் உங்களுக்கும் இந்த ஜோடி சந்தித்த பிரச்சினைதான் ஏற்படும்.


ஹோட்டலில் தங்க நேரிடுகிறதா.. அறைகள், பாத்ரூம் போன்ற இடங்களில் ரகசிய கேமராக்கள் உள்ளதா என்பதை அறிந்து செயல்படுங்கள். கலிகாலம் என்பதற்கு ஏற்ப நாட்டில் பணத்திற்காக பல 

வன்மங்கள் அரங்கேறி வருகின்றன .அந்த வரிசையில் தற்போது பெங்களூரில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




பெங்களூரு ,கெங்கேரி மெயின் சாலையில் கெஞ்சன்புரா பகுதியில் ஹோட்டலுடன் கூடிய விடுதி ஒன்று உள்ளது. நயனா என்பவர் அந்த விடுதியின் உரிமையாளர் ஆவார். இவருடைய கணவர் கிரண். நயனாவின் உறவினரான ஒரு பெண் எம் பி ஏ படித்து வருகிறார். அந்தப் பெண் நயனாவின் ஹோட்டலுக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.


அந்தப் பெண் அடிக்கடி தனது காதலனை ஹோட்டலுக்கு அழைத்து வந்துள்ளார். அவர்கள் இருவரும் ஹோட்டல் அறையில் திருட்டுத்தனமாக உல்லாசமாக இருந்து வந்தனர். இது வாடிக்கையாக நடந்து வந்துள்ளது. இதனை அறிந்த கிரண் காதல் ஜோடி தங்கும் அறையில் அவர்களுக்கே தெரியாமல் ரகசிய கேமராவை பொருத்தியுள்ளார். காதல் ஜோடி அந்தரங்கமாக இருக்கும் காட்சிகளை பதிவு செய்துள்ளார். 


அதன் பின்னர் இந்த வீடியோவை மாணவிக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பியுள்ளா். தனக்கு பணம் தர வேண்டும். இல்லாவிட்டால் உறவினர்களுக்கு அனுப்பி விடுவேன் என்று மிரட்டியுள்ளார். அதிர்ச்சி அடைந்த மாணவி என்ன செய்வது என அறியாமல் குழம்பிப் போய் கடைசியில் தனது பெற்றோர்களிடம் நடந்த தவறை எடுத்துக் கூறினார்.


இதைக் கேட்டு அதிர்ந்து போன பெற்றோர், சந்திரா லேஅவுட் காவல் நிலையத்தில் கிரண் மீது புகார் கொடுத்தனர். இதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி கிரணைக் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்ததாக நயனாவும் கைது செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்