பெங்களூரு: மக்களே உஷார்.. நீங்கள் வெளியே செல்லும்போது அங்கு சூழ்நிலை எப்படி உள்ளது என்பதை அறியாமல் அசட்டையாக இருந்தால் உங்களுக்கும் இந்த ஜோடி சந்தித்த பிரச்சினைதான் ஏற்படும்.
ஹோட்டலில் தங்க நேரிடுகிறதா.. அறைகள், பாத்ரூம் போன்ற இடங்களில் ரகசிய கேமராக்கள் உள்ளதா என்பதை அறிந்து செயல்படுங்கள். கலிகாலம் என்பதற்கு ஏற்ப நாட்டில் பணத்திற்காக பல
வன்மங்கள் அரங்கேறி வருகின்றன .அந்த வரிசையில் தற்போது பெங்களூரில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு ,கெங்கேரி மெயின் சாலையில் கெஞ்சன்புரா பகுதியில் ஹோட்டலுடன் கூடிய விடுதி ஒன்று உள்ளது. நயனா என்பவர் அந்த விடுதியின் உரிமையாளர் ஆவார். இவருடைய கணவர் கிரண். நயனாவின் உறவினரான ஒரு பெண் எம் பி ஏ படித்து வருகிறார். அந்தப் பெண் நயனாவின் ஹோட்டலுக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.
அந்தப் பெண் அடிக்கடி தனது காதலனை ஹோட்டலுக்கு அழைத்து வந்துள்ளார். அவர்கள் இருவரும் ஹோட்டல் அறையில் திருட்டுத்தனமாக உல்லாசமாக இருந்து வந்தனர். இது வாடிக்கையாக நடந்து வந்துள்ளது. இதனை அறிந்த கிரண் காதல் ஜோடி தங்கும் அறையில் அவர்களுக்கே தெரியாமல் ரகசிய கேமராவை பொருத்தியுள்ளார். காதல் ஜோடி அந்தரங்கமாக இருக்கும் காட்சிகளை பதிவு செய்துள்ளார்.
அதன் பின்னர் இந்த வீடியோவை மாணவிக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பியுள்ளா். தனக்கு பணம் தர வேண்டும். இல்லாவிட்டால் உறவினர்களுக்கு அனுப்பி விடுவேன் என்று மிரட்டியுள்ளார். அதிர்ச்சி அடைந்த மாணவி என்ன செய்வது என அறியாமல் குழம்பிப் போய் கடைசியில் தனது பெற்றோர்களிடம் நடந்த தவறை எடுத்துக் கூறினார்.
இதைக் கேட்டு அதிர்ந்து போன பெற்றோர், சந்திரா லேஅவுட் காவல் நிலையத்தில் கிரண் மீது புகார் கொடுத்தனர். இதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி கிரணைக் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்ததாக நயனாவும் கைது செய்யப்பட்டார்.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
{{comments.comment}}