அடிக்கடி ஹோட்டலில் "சந்தித்த" காதல் ஜோடி.. அடுத்தது நடந்ததைப் பாருங்கள்!

Sep 16, 2023,03:55 PM IST

பெங்களூரு: மக்களே உஷார்.. நீங்கள் வெளியே செல்லும்போது அங்கு சூழ்நிலை எப்படி உள்ளது என்பதை அறியாமல் அசட்டையாக இருந்தால் உங்களுக்கும் இந்த ஜோடி சந்தித்த பிரச்சினைதான் ஏற்படும்.


ஹோட்டலில் தங்க நேரிடுகிறதா.. அறைகள், பாத்ரூம் போன்ற இடங்களில் ரகசிய கேமராக்கள் உள்ளதா என்பதை அறிந்து செயல்படுங்கள். கலிகாலம் என்பதற்கு ஏற்ப நாட்டில் பணத்திற்காக பல 

வன்மங்கள் அரங்கேறி வருகின்றன .அந்த வரிசையில் தற்போது பெங்களூரில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




பெங்களூரு ,கெங்கேரி மெயின் சாலையில் கெஞ்சன்புரா பகுதியில் ஹோட்டலுடன் கூடிய விடுதி ஒன்று உள்ளது. நயனா என்பவர் அந்த விடுதியின் உரிமையாளர் ஆவார். இவருடைய கணவர் கிரண். நயனாவின் உறவினரான ஒரு பெண் எம் பி ஏ படித்து வருகிறார். அந்தப் பெண் நயனாவின் ஹோட்டலுக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.


அந்தப் பெண் அடிக்கடி தனது காதலனை ஹோட்டலுக்கு அழைத்து வந்துள்ளார். அவர்கள் இருவரும் ஹோட்டல் அறையில் திருட்டுத்தனமாக உல்லாசமாக இருந்து வந்தனர். இது வாடிக்கையாக நடந்து வந்துள்ளது. இதனை அறிந்த கிரண் காதல் ஜோடி தங்கும் அறையில் அவர்களுக்கே தெரியாமல் ரகசிய கேமராவை பொருத்தியுள்ளார். காதல் ஜோடி அந்தரங்கமாக இருக்கும் காட்சிகளை பதிவு செய்துள்ளார். 


அதன் பின்னர் இந்த வீடியோவை மாணவிக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பியுள்ளா். தனக்கு பணம் தர வேண்டும். இல்லாவிட்டால் உறவினர்களுக்கு அனுப்பி விடுவேன் என்று மிரட்டியுள்ளார். அதிர்ச்சி அடைந்த மாணவி என்ன செய்வது என அறியாமல் குழம்பிப் போய் கடைசியில் தனது பெற்றோர்களிடம் நடந்த தவறை எடுத்துக் கூறினார்.


இதைக் கேட்டு அதிர்ந்து போன பெற்றோர், சந்திரா லேஅவுட் காவல் நிலையத்தில் கிரண் மீது புகார் கொடுத்தனர். இதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி கிரணைக் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்ததாக நயனாவும் கைது செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகள்

news

சி.பி.ராதாகிருஷ்ணனின் வெற்றி தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக.,விற்கு கை கொடுக்குமா?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 10, 2025... இன்று நல்ல செய்தி தேடி வரும்

news

இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி

news

தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?

news

மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

news

செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?

news

மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!

news

Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?

news

பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்