பெங்களூர்: என் மனைவி நீண்ட நேரம் தூங்குகிறார். இது எனக்கு பெரும் உளைச்சலை ஏற்படுத்துகிறது என்று போலீஸில் புகார் செய்துள்ளார் பெங்களூரைச் சேர்ந்த ஒரு நபர். இந்த வினோதப் புகாரின் பேரில் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது தெரியாமல் போலீஸார் குழப்பமடைந்துள்ளனர்.
பெங்களூர் பசவனகுடி பகுதியைச் சேர்ந்தவர் கம்ரான் கான். இவர் தனது மனைவி ஆயிஷா மீது பசவனகுடி காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், எனது மனைவி எப்போது பார்த்தாலும் தூங்கிக் கொண்டே இருக்கிறார். என்னையும் சரியாக கவனிப்பதில்லை. எனது பெற்றோரையும் பார்த்துக் கொள்வதில்லை. வீட்டு வேலைகளையும் செய்வதில்லை. எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்கிறார்.
எனது மாமியார் ஹீனா கெளசர், மாமனார் அரிபுல்லா, மைத்துனர் முகம்மது மொஹின் ஆகியோரிடம் இதுகுறித்து பலமுறை சொல்லியும் அவர்கள் அதை அலட்சியப்படுத்தி விட்டனர். தினசரி இரவு லேட்டாக தூங்கப் போகிறார்.. அடுத்த நாள் பிற்பகல் 12.30 மணி வரை தூங்குகிறார். மேலும் மாலை 5. 30 மணிக்கு மீண்டும் தூங்கப் போய் விடுகிறார். இரவு 9.30 மணிக்குத்தான் எழுந்திருப்பார்.
சமைப்பதில்லை. எந்த வேலையும் செய்வதில்லை. அவர் தற்போது எனது பெற்றோருடனும் சண்டை போட்டு வருகிறார். இதனால் பெரும் மன உளைச்சல் ஏற்படுகிறது. நான் ஏதாவது கேட்டால் உடனே என்னுடன் சண்டை போட்டுக் கொண்டு அம்மா வீட்டுக்குப் போய் விடுகிறார். அவருக்கு உடல் நல பாதிப்பும் உள்ளது. அதுகுறித்து அவரோ அல்லது அவரது வீட்டாரோ என்னிடம் எதுவுமே சொல்லவில்லை. மறைத்து விட்டனர் என்று தனது புகாரில் கூறியுள்ளார் கம்ரான் கான்.
இந்தப் புகார் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகாரின் பேரில் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது தெரியாமல் காவல்துறையினரும் குழம்பிப் போயுள்ளனராம்.
Tatkal ticket Booking: கடைசி நிமிட டிக்கெட்டுக்கு இனி 'ஒற்றை சாவி' - ஓ.டி.பி கட்டாயம்
Bow bow.. செல்லப் பிராணிகளின் உரிமம் பெற.. காலக்கெடு டிச. 14 வரை நீட்டிப்பு!
பாஜக காலுன்ற முடியாத மாநிலம் தமிழகம்..மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை கடைபிடிக்குறது: செல்வப்பெருந்தகை
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
{{comments.comment}}