என் மனைவி எப்பப் பார்த்தாலும் தூங்கிட்டே இருக்காங்க.. போலீஸுக்குப் போன கணவர்!

Mar 16, 2023,03:46 PM IST

பெங்களூர்: என் மனைவி நீண்ட நேரம் தூங்குகிறார். இது எனக்கு பெரும் உளைச்சலை ஏற்படுத்துகிறது என்று போலீஸில் புகார் செய்துள்ளார் பெங்களூரைச் சேர்ந்த ஒரு நபர். இந்த வினோதப் புகாரின் பேரில் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது தெரியாமல் போலீஸார் குழப்பமடைந்துள்ளனர்.


பெங்களூர் பசவனகுடி பகுதியைச் சேர்ந்தவர் கம்ரான் கான். இவர் தனது மனைவி ஆயிஷா மீது பசவனகுடி காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், எனது மனைவி எப்போது பார்த்தாலும் தூங்கிக் கொண்டே இருக்கிறார். என்னையும் சரியாக கவனிப்பதில்லை. எனது பெற்றோரையும் பார்த்துக் கொள்வதில்லை. வீட்டு வேலைகளையும் செய்வதில்லை. எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்கிறார்.


எனது மாமியார் ஹீனா கெளசர், மாமனார் அரிபுல்லா, மைத்துனர் முகம்மது மொஹின் ஆகியோரிடம் இதுகுறித்து பலமுறை சொல்லியும் அவர்கள் அதை அலட்சியப்படுத்தி விட்டனர்.  தினசரி இரவு லேட்டாக தூங்கப் போகிறார்.. அடுத்த நாள் பிற்பகல் 12.30 மணி வரை தூங்குகிறார்.  மேலும் மாலை 5. 30 மணிக்கு மீண்டும் தூங்கப் போய் விடுகிறார். இரவு 9.30 மணிக்குத்தான் எழுந்திருப்பார்.



சமைப்பதில்லை. எந்த வேலையும் செய்வதில்லை. அவர் தற்போது எனது பெற்றோருடனும் சண்டை போட்டு வருகிறார். இதனால் பெரும் மன உளைச்சல் ஏற்படுகிறது.  நான் ஏதாவது கேட்டால் உடனே என்னுடன் சண்டை போட்டுக் கொண்டு அம்மா வீட்டுக்குப் போய் விடுகிறார். அவருக்கு உடல் நல பாதிப்பும் உள்ளது. அதுகுறித்து அவரோ அல்லது அவரது வீட்டாரோ என்னிடம் எதுவுமே சொல்லவில்லை. மறைத்து விட்டனர் என்று தனது புகாரில் கூறியுள்ளார் கம்ரான் கான்.


இந்தப் புகார் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகாரின் பேரில் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது  தெரியாமல் காவல்துறையினரும் குழம்பிப் போயுள்ளனராம்.


சமீபத்திய செய்திகள்

news

பாட்டாளி மக்கள் கட்சி என்பது தனிப்பட்ட நபரின் சொத்து கிடையாது: அன்புமணி ராமதாஸ்!

news

கூடல் மாநகரில் கூடுகிறது கழகப் பொதுக்குழு.. பொதுத் தேர்தலில் வென்றிடுவோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஈடில்லாத மாபெரும் கலைஞன் கமல்ஹாசன்.. அவரை சிறுமைப்படுத்துவதா?.. நடிகர் சங்கம் கண்டனம்

news

மாநிலங்களவை சீட் ஒதுக்கியதற்கு.. முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமலஹாசன்!

news

அன்புமணிக்கு பக்க பலமாகும்.. செளமியா அன்புமணி, 3 மகள்கள்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!

news

பாமக பொருளாளர் திலகபாமாவை நீக்கிய டாக்டர் ராமதாஸ்.. தொடர்வார் என்று அறிவித்தார் அன்புமணி!

news

அன்புதானே எல்லாம்.. பாமகவின் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 23 மா.செக்களில் 22 பேர் வருகை!

news

வண்டி வண்டியாக கொண்டு வந்து கொட்டப் போறாங்க.. என்ன பண்ணப் போறீங்க?.. விஜய் கேள்வி

news

தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்.. முதல்வர் மு க ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்