என் மனைவி எப்பப் பார்த்தாலும் தூங்கிட்டே இருக்காங்க.. போலீஸுக்குப் போன கணவர்!

Mar 16, 2023,03:46 PM IST

பெங்களூர்: என் மனைவி நீண்ட நேரம் தூங்குகிறார். இது எனக்கு பெரும் உளைச்சலை ஏற்படுத்துகிறது என்று போலீஸில் புகார் செய்துள்ளார் பெங்களூரைச் சேர்ந்த ஒரு நபர். இந்த வினோதப் புகாரின் பேரில் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது தெரியாமல் போலீஸார் குழப்பமடைந்துள்ளனர்.


பெங்களூர் பசவனகுடி பகுதியைச் சேர்ந்தவர் கம்ரான் கான். இவர் தனது மனைவி ஆயிஷா மீது பசவனகுடி காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், எனது மனைவி எப்போது பார்த்தாலும் தூங்கிக் கொண்டே இருக்கிறார். என்னையும் சரியாக கவனிப்பதில்லை. எனது பெற்றோரையும் பார்த்துக் கொள்வதில்லை. வீட்டு வேலைகளையும் செய்வதில்லை. எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்கிறார்.


எனது மாமியார் ஹீனா கெளசர், மாமனார் அரிபுல்லா, மைத்துனர் முகம்மது மொஹின் ஆகியோரிடம் இதுகுறித்து பலமுறை சொல்லியும் அவர்கள் அதை அலட்சியப்படுத்தி விட்டனர்.  தினசரி இரவு லேட்டாக தூங்கப் போகிறார்.. அடுத்த நாள் பிற்பகல் 12.30 மணி வரை தூங்குகிறார்.  மேலும் மாலை 5. 30 மணிக்கு மீண்டும் தூங்கப் போய் விடுகிறார். இரவு 9.30 மணிக்குத்தான் எழுந்திருப்பார்.



சமைப்பதில்லை. எந்த வேலையும் செய்வதில்லை. அவர் தற்போது எனது பெற்றோருடனும் சண்டை போட்டு வருகிறார். இதனால் பெரும் மன உளைச்சல் ஏற்படுகிறது.  நான் ஏதாவது கேட்டால் உடனே என்னுடன் சண்டை போட்டுக் கொண்டு அம்மா வீட்டுக்குப் போய் விடுகிறார். அவருக்கு உடல் நல பாதிப்பும் உள்ளது. அதுகுறித்து அவரோ அல்லது அவரது வீட்டாரோ என்னிடம் எதுவுமே சொல்லவில்லை. மறைத்து விட்டனர் என்று தனது புகாரில் கூறியுள்ளார் கம்ரான் கான்.


இந்தப் புகார் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகாரின் பேரில் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது  தெரியாமல் காவல்துறையினரும் குழம்பிப் போயுள்ளனராம்.


சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

news

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?

news

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்