"என்னாது.. எனக்கு ரூ. 9000 கோடியா".. டிரைவரை ஜெர்க் ஆக வைத்த வங்கி!

Sep 21, 2023,05:11 PM IST
சென்னை : சென்னையை சேர்ந்த கார் டிரைவர் ஒருவரின் வங்கிக் கணக்கில் ஒரே நாளில் திடீரென ரூ.9000 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த கார் டிரைவர் ராஜ்குமார். இவரது வங்கி கணக்கில் ரூ.15 மட்டுமே பேலன்ஸ் இருந்துள்ளது. ஆனால்  ரூ.9000 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக ராஜ்குமாருக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் வந்துள்ளது. ஒரே நாளில் 9000 கோடி, அதுவும் தன்னுடைய கணக்கிற்கு யார் டெபாசிட் செய்யப் போகிறார்கள்? தன்னை யாரோ ஏமாற்ற முயற்சி செய்வதாக நினைத்துள்ளார் ராஜ்குமார்.



இருந்தாலும் தன்னுடைய வங்கிக் கணக்கில் 9000 கோடி இருப்பதை உறுதி செய்து கொள்ள நினைத்த அவர், தன்னுடைய நண்பருக்கு ரூ.21,000 ஐ அனுப்பி சோதனை செய்துள்ளார். அதே போல் ரூ.21,000 அனுப்பப்பட்டுள்ளது. இதனால் இன்ப அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்தார் ராஜ்குமார். அந்த சமயத்தில் ராஜ்குமார் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் உயரதிகாரிகள் ராஜ்குமாரை தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். இந்த விவகாரத்தை வெளியில் சொல்லி, விஷயத்தை பெரிதாக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அது மட்டுமின்றி செலவு செய்த ரூ.21,000 பணத்தை திருப்பி தர வேண்டாம். அதற்கு பதிலாக வாகன லோன் தருவதாக சொல்லி சமரசமும் பேசி உள்ளனர். வங்கி தொழில்நட்ப கோளாறால் ஏற்பட்ட இந்த குளறுபடி சென்னையில் பரபரப்பை கிளப்பி உள்ளது. ஒரே நாளில் வங்கி கணக்கில் ரூ.15 லிருந்து ரூ.9000 கோடி வரும் அதிசயம் தங்களுக்கும் நடக்காதா என பலர் ஏக்கத்துடன் தங்களின் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். எப்படியோ வங்கி அதிகாரிகள் செய்த தவறுக்கு ராஜ்குமாருக்கு ரூ.21,000 லாபம் கிடைத்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

news

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?

news

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்