"என்னாது.. எனக்கு ரூ. 9000 கோடியா".. டிரைவரை ஜெர்க் ஆக வைத்த வங்கி!

Sep 21, 2023,05:11 PM IST
சென்னை : சென்னையை சேர்ந்த கார் டிரைவர் ஒருவரின் வங்கிக் கணக்கில் ஒரே நாளில் திடீரென ரூ.9000 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த கார் டிரைவர் ராஜ்குமார். இவரது வங்கி கணக்கில் ரூ.15 மட்டுமே பேலன்ஸ் இருந்துள்ளது. ஆனால்  ரூ.9000 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக ராஜ்குமாருக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் வந்துள்ளது. ஒரே நாளில் 9000 கோடி, அதுவும் தன்னுடைய கணக்கிற்கு யார் டெபாசிட் செய்யப் போகிறார்கள்? தன்னை யாரோ ஏமாற்ற முயற்சி செய்வதாக நினைத்துள்ளார் ராஜ்குமார்.



இருந்தாலும் தன்னுடைய வங்கிக் கணக்கில் 9000 கோடி இருப்பதை உறுதி செய்து கொள்ள நினைத்த அவர், தன்னுடைய நண்பருக்கு ரூ.21,000 ஐ அனுப்பி சோதனை செய்துள்ளார். அதே போல் ரூ.21,000 அனுப்பப்பட்டுள்ளது. இதனால் இன்ப அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்தார் ராஜ்குமார். அந்த சமயத்தில் ராஜ்குமார் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் உயரதிகாரிகள் ராஜ்குமாரை தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். இந்த விவகாரத்தை வெளியில் சொல்லி, விஷயத்தை பெரிதாக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அது மட்டுமின்றி செலவு செய்த ரூ.21,000 பணத்தை திருப்பி தர வேண்டாம். அதற்கு பதிலாக வாகன லோன் தருவதாக சொல்லி சமரசமும் பேசி உள்ளனர். வங்கி தொழில்நட்ப கோளாறால் ஏற்பட்ட இந்த குளறுபடி சென்னையில் பரபரப்பை கிளப்பி உள்ளது. ஒரே நாளில் வங்கி கணக்கில் ரூ.15 லிருந்து ரூ.9000 கோடி வரும் அதிசயம் தங்களுக்கும் நடக்காதா என பலர் ஏக்கத்துடன் தங்களின் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். எப்படியோ வங்கி அதிகாரிகள் செய்த தவறுக்கு ராஜ்குமாருக்கு ரூ.21,000 லாபம் கிடைத்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு

news

காற்றில் கலந்தார் கன்னடத்து பைங்கிளி... சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

news

சஞ்சய் தத்துக்கு இன்னொரு படம் பண்ணுவேன்.. அதுல மிஸ்டேக்கை சரி பண்ணிடுவேன் - லோகேஷ் கனகராஜ்

news

வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!

news

கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

news

அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி

news

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்

news

Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்

news

இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?

அதிகம் பார்க்கும் செய்திகள்