"என்னாது.. எனக்கு ரூ. 9000 கோடியா".. டிரைவரை ஜெர்க் ஆக வைத்த வங்கி!

Sep 21, 2023,05:11 PM IST
சென்னை : சென்னையை சேர்ந்த கார் டிரைவர் ஒருவரின் வங்கிக் கணக்கில் ஒரே நாளில் திடீரென ரூ.9000 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த கார் டிரைவர் ராஜ்குமார். இவரது வங்கி கணக்கில் ரூ.15 மட்டுமே பேலன்ஸ் இருந்துள்ளது. ஆனால்  ரூ.9000 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக ராஜ்குமாருக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் வந்துள்ளது. ஒரே நாளில் 9000 கோடி, அதுவும் தன்னுடைய கணக்கிற்கு யார் டெபாசிட் செய்யப் போகிறார்கள்? தன்னை யாரோ ஏமாற்ற முயற்சி செய்வதாக நினைத்துள்ளார் ராஜ்குமார்.



இருந்தாலும் தன்னுடைய வங்கிக் கணக்கில் 9000 கோடி இருப்பதை உறுதி செய்து கொள்ள நினைத்த அவர், தன்னுடைய நண்பருக்கு ரூ.21,000 ஐ அனுப்பி சோதனை செய்துள்ளார். அதே போல் ரூ.21,000 அனுப்பப்பட்டுள்ளது. இதனால் இன்ப அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்தார் ராஜ்குமார். அந்த சமயத்தில் ராஜ்குமார் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் உயரதிகாரிகள் ராஜ்குமாரை தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். இந்த விவகாரத்தை வெளியில் சொல்லி, விஷயத்தை பெரிதாக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அது மட்டுமின்றி செலவு செய்த ரூ.21,000 பணத்தை திருப்பி தர வேண்டாம். அதற்கு பதிலாக வாகன லோன் தருவதாக சொல்லி சமரசமும் பேசி உள்ளனர். வங்கி தொழில்நட்ப கோளாறால் ஏற்பட்ட இந்த குளறுபடி சென்னையில் பரபரப்பை கிளப்பி உள்ளது. ஒரே நாளில் வங்கி கணக்கில் ரூ.15 லிருந்து ரூ.9000 கோடி வரும் அதிசயம் தங்களுக்கும் நடக்காதா என பலர் ஏக்கத்துடன் தங்களின் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். எப்படியோ வங்கி அதிகாரிகள் செய்த தவறுக்கு ராஜ்குமாருக்கு ரூ.21,000 லாபம் கிடைத்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்