"கூல்" தோனியோட ஜெர்சி நம்பர் 7க்கு ஓய்வு.. இனிமேல் யாருக்கும் அது கிடையாது!

Dec 15, 2023,12:04 PM IST

மும்பை: கூல் கேப்டன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று விட்ட நிலையில் அவர் அணிந்து வந்த டீம் இந்தியாவின் 7ம் எண் ஜெர்சிக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் ஓய்வு கொடுத்து விட்டது. இனிமேல் அந்த எண் யாருக்கும் கொடுக்கப்பட மாட்டாது.


தோனிக்கு கெளரவம் அளிக்கும் வகையில் இந்த முடிவை இந்திய கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ளது. தோனி என்றதுமே அவர் இந்திய அணியில் இடம் பெற்றருந்தபோது அணிந்திருந்த இந்த 7ம் எண் ஜெர்சியும் தான் கூடவே நினைவுக்கு வரும்.


ஐசிசி தொடர்களில் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர் தோனி. ஐசிசியின் அனைத்துக் கோப்பைகளையும் வென்ற ஒரே இந்திய கேப்டன் இவர்தான். அந்த சாதனையை அத்தனை சீக்கிரம் யாராலும் தகர்க்க முடியாது.




சர்வதேச அளவில் ஒரு நாள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று விட்டார் தோனி. ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே அவர் தற்போது ஆடி வருகிறார். இந்த நிலையில் அவரது ஜெர்சிக்கும் ஓய்வளித்துள்ளது பிசிசிஐ. ஏற்கனவே சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற பின்னர் அவர் அணிந்து வந்த 10ம் எண் ஜெர்சிக்கும் இதேபோல ஓய்வளித்தது  பிசிசிஐ என்பது நினைவிருக்கலாம்.


இந்த முடிவை இந்திய அணிக்கும் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 10ம் எண்ணை எப்படி வீரர்கள் தேர்வு செய்ய முடியாதோ அதேபோல இனிமேல் 7ம் எண்ணையும் வீரர்கள் தேர்வு செய்ய முடியாது. 


ஆரம்பத்தில் சச்சின் டெண்டுல்கரின் ஜெர்சி ஓய்வளிக்கப்படாமல் இருந்தது. அந்த சமயத்தில் ஷர்துள் தாக்கூர் ஒரு போட்டியில் சச்சினின் 10ம் எண் ஜெர்சியை அணிந்து விளையாடினார். இதையடுத்து சச்சின் ரசிகர்கள் அதற்கு ஆட்சேபனை தெரிவித்தனர். இதையடுத்தே 10ம் எண்ணுக்கு ஓய்வளிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது தோனிக்கும் அதே கெளரவம் அளிக்கப்பட்டுள்ளது.


தற்போது வீரர்கள் தங்களுக்குப் பிடித்த எண்ணைத் தேர்வு செய்வதற்கு வசதியாக 60 எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்