பெங்களூரு: பெங்களூரு அருகே வால்வோ கார் மீது கண்டெய்னர் லாரி விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள் உட்பட 6 ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூர் அருகே நெலமங்களா கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் தும்கூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார் வந்து கொண்டிருந்தது. அப்போது அதற்கு இணையாக ஒரு கண்டெய்னர் லாரியும் சென்று கொண்டிருந்தது. முன்னால் சென்று கொண்டிருந்த இரண்டு கார்கள் அடுத்தடுத்து சென்ற போது விபத்தை தவிர்ப்பதற்காக லாரியை திருப்பியுள்ளார் டிரைவர். அப்போது கண்டெய்னர் லாரி காரின் மேல் விழுந்து நசுக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காருக்குள் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அருகில் இருந்த கிராம மக்கள் சத்தம் கேட்டு பதறிப் போய் ஓடி வந்தனர். போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது. விசாரணையில், காரில் பயணித்தவர்கள் விஜயபுரா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
விபத்து காரணமாக பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல கிலோமீட்டர் தூரம் வரை வாகனங்கள் ஊர்ந்து சென்றன. தற்போது விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அட்சய திருதியை முன்னிட்டு.. தங்கத்தின் விலை தொடர் சரிவு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!
Swearing in: அமைச்சராக இன்று மாலை பதவி ஏற்கிறார்.. மனோ தங்கராஜ்
ஜனாதிபதி கையால் பத்மபூஷன் விருதை பெற.. குடும்பத்துடன் டெல்லிக்கு கிளம்பினார்.. நடிகர் அஜித்!
Cabinet Reshuffle: பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்.. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்!
அமைச்சர்கள் நீக்கம்.. தானாக எடுத்தது அல்ல.. தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது.. டாக்டர் தமிழிசை
IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!
துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!
பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது
விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு.. முதல் முறையாக.. தேமுதிக பொதுக்குழு கூட்டம்.. 30ம் தேதி!
{{comments.comment}}