பெங்களூரு அருகே.. கார் மீது விழுந்த கண்டெய்னர் லாரி.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி

Dec 21, 2024,05:59 PM IST

பெங்களூரு: பெங்களூரு அருகே வால்வோ கார் மீது கண்டெய்னர் லாரி விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள் உட்பட 6  ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


பெங்களூர் அருகே நெலமங்களா கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் தும்கூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார் வந்து கொண்டிருந்தது. அப்போது அதற்கு இணையாக ஒரு கண்டெய்னர் லாரியும் சென்று கொண்டிருந்தது. முன்னால் சென்று கொண்டிருந்த  இரண்டு கார்கள் அடுத்தடுத்து சென்ற போது விபத்தை தவிர்ப்பதற்காக லாரியை திருப்பியுள்ளார் டிரைவர். அப்போது கண்டெய்னர் லாரி காரின் மேல் விழுந்து நசுக்கியதாக கூறப்படுகிறது.




இதில் காருக்குள் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அருகில் இருந்த கிராம மக்கள் சத்தம் கேட்டு பதறிப் போய் ஓடி வந்தனர்.  போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது. விசாரணையில், காரில் பயணித்தவர்கள் விஜயபுரா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. 


விபத்து காரணமாக பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல கிலோமீட்டர் தூரம் வரை வாகனங்கள் ஊர்ந்து சென்றன. தற்போது விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் துயர சம்பவம்...விஜய் தாமதமாக வந்ததே காரணம்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் விளக்கம்!

news

கரூர் சம்பவம்...முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசு தவறிவிட்டது: சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி!

news

லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு: நடிகர் விஷால் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

தீபாவளி வருது.. 4 நாளா லீவு கிடைச்சா நல்லாருக்கும்.. எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்!

news

கல்வி உதவித்தொகை வழங்காமல் நிறுத்தி வைப்பதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும்: அன்புமணி ராமதாஸ்!

news

வானிலை விடுத்த எச்சரிக்கை: 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

news

தமிழ்க் கலாச்சாரத்தைக் கேவலப்படுத்தும் பிக் பாஸ்.. தடை செய்யுங்கள்.. த.வா.க. வேல்முருகன் ஆவேசம்

news

பீகார் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன்.. நிதீஷ் குமார் தோற்பார்.. பிரஷாந்த் கிஷோர்

news

எல்லாமே பக்காவா செட் ஆயிருச்சு.. வட கிழக்கு பருவ மழை இன்று அல்லது நாளை தொடங்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்