பெங்களூரு: பெங்களூரு அருகே வால்வோ கார் மீது கண்டெய்னர் லாரி விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள் உட்பட 6 ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூர் அருகே நெலமங்களா கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் தும்கூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார் வந்து கொண்டிருந்தது. அப்போது அதற்கு இணையாக ஒரு கண்டெய்னர் லாரியும் சென்று கொண்டிருந்தது. முன்னால் சென்று கொண்டிருந்த இரண்டு கார்கள் அடுத்தடுத்து சென்ற போது விபத்தை தவிர்ப்பதற்காக லாரியை திருப்பியுள்ளார் டிரைவர். அப்போது கண்டெய்னர் லாரி காரின் மேல் விழுந்து நசுக்கியதாக கூறப்படுகிறது.

இதில் காருக்குள் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அருகில் இருந்த கிராம மக்கள் சத்தம் கேட்டு பதறிப் போய் ஓடி வந்தனர். போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது. விசாரணையில், காரில் பயணித்தவர்கள் விஜயபுரா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
விபத்து காரணமாக பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல கிலோமீட்டர் தூரம் வரை வாகனங்கள் ஊர்ந்து சென்றன. தற்போது விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}