-பா.பானுமதி
மார்கழி பாடி உன்னை மணந்து கொண்டேன் மாதவா
நோன்பு இருந்து உன்னுடன் சேர்ந்து கொண்டேன் ஸ்ரீதரா
பாவை பாடி உன்னை கவர்ந்து விட்டேன் பரந்தாமா
வாரணம் ஆயிரம் பாடி உன்னை வணங்கினேன் வரதா
உன்னைச் சேர ஏங்கினேன்
ஊண் உறக்கமின்றி மூச்சு வாங்கினேன்
உயிரைப் பிரிந்து உடலை தாங்கினேன்
உன்னை மணந்து மணம் வீசினேன்
உன் விரல் பிடித்து வலம் வந்தேன்
உன் விழியிலே சக்கரசுழல் கண்டேன்
உன் மொழியிலே சொக்கி விழுந்தேன்
பள்ளி கொண்ட நாதா
உன் பாதத்தில் இடம் கொண்டு பரம சுகம் கண்டேன்

இந்த நாளுக்காக தான் இத்தனை நாளும் வாழ்ந்தேன்
உன்னை சேர தானே ஒவ்வொரு நாளும் வளர்ந்தேன்
எனை ஆளும் சுற்றம் நீயே இனி நான் உறங்கா
என் கொற்றமே கோபாலா கோவிந்தா
பங்குனி உத்திரத்தில் பைந்தமிழர் உன்னை பாடினேன்
பங்கையர் கண்ணா!
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
கோவை கொடூரம்.. கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு.. முதல்வர் விஜய்
அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம்: அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனிடம் கோரிக்கை!
South West Monsoon: தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: சென்னையில் சட்டென மாறிய வானிலை
Chettinadu Recipe: தேன் போல தித்திக்கும்.. மாம்பழ குல்ஃபி ஐஸ்!
கோவை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. அதிர்ச்சியில் தமிழ்நாடு.. அனைத்துக் கட்சிகளும் கடும் கண்டனம்
தவெக அரசில் சேர முடியாமல் போச்சே.. தனிச் சின்னத்தில் போட்டியிடாததால் வருந்தும் கட்சிகள்?
மே 23 ஆமைகள் தினம்.. மாணவர்களுக்கான நீதி கதை.. "கடைசியாக வந்த கோமதி"
Kalaimani: சிந்தனை.. எப்போது வெற்றி கிட்டும்!
Tamil Poem by Sasikala Viswanathan: அவலம்!
{{comments.comment}}