- பா.பானுமதி
இறைவா நீ எங்கிருக்கிறாய்
இமைகளுக்கு தெரியாமல் எங்கோ இருக்கிறாய்
இதயத்தில் இருந்தால்
என் விழிகளுக்கு தெரியாது
உதயத்தில் இருக்கிறாய்
ஆனாலும் உண்மை விளங்காது
காணும் காட்சிகளில் எல்லாம் கலந்திருக்கிறாய்
எனினும் கண்களுக்கு புரியாது
உதவும் உள்ளங்கள் எல்லாம் ஒளிந்து இருக்கிறாய்
என்றாலும் உண்மை தெரியாது

இயற்கையில் இருண்ட கலந்திருக்கிறாய்
என்றாலும் இமைகளுக்கு தெரியாது
சுமைகளை சுமந்து கொண்டு சுற்றி வருவதால்
சுகங்களில் நீ இருந்தாலும் உள்ளம் அதை உணராது
எங்கே இருந்தாலும் நீ எதிர்பட்டு விடு
எண்ணற்ற வினாக்கள் என்னை எடுத்து விளையாடுகிறது
கோவில்களில் குடியிருக்கிறாயா
கும்பிட்டாலும் தெரியவில்லை
வீட்டிலே வீற்று இருக்கிறாயா
விழுந்து வணங்கினாலும் விளங்கவில்லை
தேடிக் கொண்டே இருக்கிறேன்
என் கண்ணில் படாமல் இருந்தால் எப்படி
வாட விட்டு வறுத்தமுற்று
வளைத்து விடலாமா நல்சொற் படி
கண்முன்னே வா கேள்விக்கணைகளை ஏற்று
களைக்காமல் விடையை தா...
இருப்பிடம் தெரிந்து விட்டால் இந்த இம்சை இல்லை
பொறுப்பிடம் நீயே என்று புகுந்து விடுவேன்
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
கார்கே விவகாரத்தில் FIR பதிவு செய்ய வேண்டும்.. பிரதமர் மோடிக்கு ராகுல் கோரிக்கை
ஜல்லிக்கட்டை தடை செய்யத் திட்டமா.. சோழவந்தான் தவெக எம்எல்ஏ பேச்சுக்கு அதிமுக கண்டனம்
ஓ போஸ்ட் ஆபீஸ் இப்படித்தான் செயல்படுதா?.. நேரில் பார்த்து அறிந்த மாணவர்கள்!
சிந்தனைச் சிதறல்.. தேடல் சரியானதாக இருந்தால் தேர்வும் சரியானதாகவே இருக்கும்!
மாற்றம் எப்ப நிகழும் என்று விடையும் புரியலே!
சமூகம் திருந்துவது எப்போது?
அன்புள்ள அப்பா!
ஒற்றைச் சொல்
கண்மணி!
{{comments.comment}}