- பா.பானுமதி
இறைவா நீ எங்கிருக்கிறாய்
இமைகளுக்கு தெரியாமல் எங்கோ இருக்கிறாய்
இதயத்தில் இருந்தால்
என் விழிகளுக்கு தெரியாது
உதயத்தில் இருக்கிறாய்
ஆனாலும் உண்மை விளங்காது
காணும் காட்சிகளில் எல்லாம் கலந்திருக்கிறாய்
எனினும் கண்களுக்கு புரியாது
உதவும் உள்ளங்கள் எல்லாம் ஒளிந்து இருக்கிறாய்
என்றாலும் உண்மை தெரியாது

இயற்கையில் இருண்ட கலந்திருக்கிறாய்
என்றாலும் இமைகளுக்கு தெரியாது
சுமைகளை சுமந்து கொண்டு சுற்றி வருவதால்
சுகங்களில் நீ இருந்தாலும் உள்ளம் அதை உணராது
எங்கே இருந்தாலும் நீ எதிர்பட்டு விடு
எண்ணற்ற வினாக்கள் என்னை எடுத்து விளையாடுகிறது
கோவில்களில் குடியிருக்கிறாயா
கும்பிட்டாலும் தெரியவில்லை
வீட்டிலே வீற்று இருக்கிறாயா
விழுந்து வணங்கினாலும் விளங்கவில்லை
தேடிக் கொண்டே இருக்கிறேன்
என் கண்ணில் படாமல் இருந்தால் எப்படி
வாட விட்டு வறுத்தமுற்று
வளைத்து விடலாமா நல்சொற் படி
கண்முன்னே வா கேள்விக்கணைகளை ஏற்று
களைக்காமல் விடையை தா...
இருப்பிடம் தெரிந்து விட்டால் இந்த இம்சை இல்லை
பொறுப்பிடம் நீயே என்று புகுந்து விடுவேன்
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
Rathi's Kitchen: நாக்கு சப்புக் கொட்டி சாப்பிட வைக்கும்.. நார்ச் சத்து மிகுந்த துவையல்!
கனவுகள் மெய்ப்படும்!
Wonder Words: ஏன்.. எப்படி .. எதற்கு?.. விந்தையான வார்த்தைகள்!
பலவண்ணம்!
எதிர்பாராமல் கிடைத்த உதவிக்கு என்றுமே கடமைப்படு!
Thangalakshmi Short Story: உண்மை என்பது இவ்வுலகில் இல்லை
காரைக்குடியில் மக்கள் கூட்டத்திற்கு நடுவே சைக்கிள் ஓட்டிய விஜய்...ஸ்தம்பித்த சாலைகள்
இணையத்தில் கசிந்த விஜய்யின் 'ஜனநாயகன்' சீன்ஸ்...ரசிகர்கள் கொதிப்பு
ஜனநாயகன் திரைப்படத்திற்காக முதல் ஆளாக குரல் கொடுத்த சிவகார்த்திகேயன்
{{comments.comment}}