- பா.பானுமதி
இறைவா நீ எங்கிருக்கிறாய்
இமைகளுக்கு தெரியாமல் எங்கோ இருக்கிறாய்
இதயத்தில் இருந்தால்
என் விழிகளுக்கு தெரியாது
உதயத்தில் இருக்கிறாய்
ஆனாலும் உண்மை விளங்காது
காணும் காட்சிகளில் எல்லாம் கலந்திருக்கிறாய்
எனினும் கண்களுக்கு புரியாது
உதவும் உள்ளங்கள் எல்லாம் ஒளிந்து இருக்கிறாய்
என்றாலும் உண்மை தெரியாது

இயற்கையில் இருண்ட கலந்திருக்கிறாய்
என்றாலும் இமைகளுக்கு தெரியாது
சுமைகளை சுமந்து கொண்டு சுற்றி வருவதால்
சுகங்களில் நீ இருந்தாலும் உள்ளம் அதை உணராது
எங்கே இருந்தாலும் நீ எதிர்பட்டு விடு
எண்ணற்ற வினாக்கள் என்னை எடுத்து விளையாடுகிறது
கோவில்களில் குடியிருக்கிறாயா
கும்பிட்டாலும் தெரியவில்லை
வீட்டிலே வீற்று இருக்கிறாயா
விழுந்து வணங்கினாலும் விளங்கவில்லை
தேடிக் கொண்டே இருக்கிறேன்
என் கண்ணில் படாமல் இருந்தால் எப்படி
வாட விட்டு வறுத்தமுற்று
வளைத்து விடலாமா நல்சொற் படி
கண்முன்னே வா கேள்விக்கணைகளை ஏற்று
களைக்காமல் விடையை தா...
இருப்பிடம் தெரிந்து விட்டால் இந்த இம்சை இல்லை
பொறுப்பிடம் நீயே என்று புகுந்து விடுவேன்
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
Ira Kalaiselvi short story: ஒற்றுமையே பலம்!
Sripirya Short story: முதலில் படிப்பு, பின்பு திருமணம்!
சொல்லும் முன் அறிந்து சொல்!
பங்குனி தேய்பிறை அஷ்டமி.. ஈரோடு ராட்டைசுற்றி பாளையம் காலபைரவர் கோவிலில் விசேஷம்!
சிவப்பழகி.. அவளன்றி ஓரணுவும் அசையாது.. அவளன்றி யார் பசியும் ஓயாது!
இறைவனின் இருப்பிடம்!
ஏனாதி நாயனார் வரலாறு.. 63 நாயன்மார்கள் வரலாறு!
Vrischikasana: வேதாவின் யோகா.. ரப்பர் மாதிரி வளையுறாங்களேய்யா.. முயன்றால் முடியாததே இல்லை
ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : இன்று கோல்கத்தா-லக்னோ அணிகள் மோதல்
{{comments.comment}}