இறைவனின் இருப்பிடம்!

Apr 09, 2026,11:10 AM IST

- பா.பானுமதி


இறைவா நீ எங்கிருக்கிறாய் 

இமைகளுக்கு தெரியாமல் எங்கோ இருக்கிறாய் 


இதயத்தில் இருந்தால் 

என் விழிகளுக்கு தெரியாது


உதயத்தில் இருக்கிறாய் 

ஆனாலும் உண்மை விளங்காது 


காணும் காட்சிகளில் எல்லாம் கலந்திருக்கிறாய் 

எனினும் கண்களுக்கு புரியாது 


உதவும் உள்ளங்கள் எல்லாம் ஒளிந்து இருக்கிறாய் 

என்றாலும் உண்மை தெரியாது




இயற்கையில் இருண்ட கலந்திருக்கிறாய் 

என்றாலும் இமைகளுக்கு தெரியாது 


சுமைகளை சுமந்து கொண்டு சுற்றி வருவதால் 

சுகங்களில் நீ இருந்தாலும் உள்ளம் அதை உணராது 


எங்கே இருந்தாலும் நீ எதிர்பட்டு விடு 

எண்ணற்ற வினாக்கள் என்னை எடுத்து விளையாடுகிறது 


கோவில்களில் குடியிருக்கிறாயா 

கும்பிட்டாலும் தெரியவில்லை 


வீட்டிலே வீற்று இருக்கிறாயா 

விழுந்து வணங்கினாலும் விளங்கவில்லை


தேடிக் கொண்டே இருக்கிறேன் 

என் கண்ணில் படாமல் இருந்தால் எப்படி 


வாட விட்டு வறுத்தமுற்று

வளைத்து விடலாமா நல்சொற் படி 


கண்முன்னே வா கேள்விக்கணைகளை ஏற்று 

களைக்காமல் விடையை தா...


இருப்பிடம் தெரிந்து விட்டால் இந்த இம்சை இல்லை 

பொறுப்பிடம் நீயே என்று புகுந்து விடுவேன் 


(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

"முதல்ல உங்க கட்சியைக் காப்பாற்றும் வேலையை பாருங்கள்!" - எடப்பாடி பழனிச்சாமிக்கு தவெக பதிலடி

news

"நான் எங்கும் ஓடி ஒளியவில்லை" - காவல்துறைக்கு செந்தில் பாலாஜி எழுதிய கடிதத்தால் பரபரப்பு!

news

"அதிமுகவின் எம்.எல்.ஏ-க்களை விஜய் களவாடுகிறார்!" – எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

news

யாரையும் நாங்கள் அழைக்கவில்லை.. குதிரை பேர புகாருக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில்!

news

வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி

news

தேர்தலில் தனித்துப் போட்டியிட கம்யூனிஸ்ட் கட்சிகள் தயார்: சிபிஐ திடீர் அறிவிப்பு!

news

அப்பா படம் ஜனநாயகன் வருது.. மகன் படம் சிக்மாவை ஆகஸ்ட்டுக்கு ஒத்திவைக்கும் லைகா?

news

தமிழகத்தில் நடப்பது அன்பு சாம்ராஜ்யம் - அமைச்சர் அருண்ராஜ் புகழாரம்

news

Santhi Sinnathambi Poem: இறைவா தருவாயா??

அதிகம் பார்க்கும் செய்திகள்