வலிகளில் வாழ்க்கை...!

Jan 24, 2026,01:13 PM IST

- பா.பானுமதி


நாட்கள் எல்லாம் 

வாட்களாய் வெட்ட 


ஆட்கள் எல்லாம் 

முட்களாய் குத்த


சுற்றி இருப்பவை எல்லாம்

சுத்திகளாக 


பற்றி இருப்பவை எல்லாம் 

கோடாரியாக 


மாற்றவும் முடியாமல் 

தேற்றவும் தெரியாமல் 




ஏற்றியும் கொள்ளாமல் 

ஆற்றவும் அறியாமல் 


தினம் தினம் திருப்பங்கள் 

திருக


களை இழந்த சிலைகளாய் 

விலை கொள்ள நிலை 


ஓடி ஓடி பாதங்கள்

உஷ்ணம் கொட்ட 


ஆடி அலைந்த தோள்கள் 

பூசனம் பிடிக்க 


தேடி அலைந்தது என்னவோ

தென்படவில்லை 


வாடி இருப்பது அறியாமை 

ஓடிக் கொண்டிருந்தால் புரியாமை 


நாடினாலும் சாடினாலும் 

விளைவுகள் விளங்காதவை 


அதிகமான அன்பும் எதிர்பார்ப்பில்லாத பண்பும் 

அடிபட்டு அடங்கும் 


அளவுகள் மாறினாலும்

பிளவுகள் உண்டாகும் 


தாமரை இலை தண்ணீரே 

சரியானது 


சித்தன் செயல்கள் முறையானது

ஆனால் அது...


அனுபவம் கிடைக்கும் வரை ஆடி 

அடங்கும் வரை புரியாதது 

பின்னர் 

நெஞ்சை விட்டு அகலாதது 


வாழ்க்கையின் பாதை புதிர் தான் 

வலிமிக்கது தான்..!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

news

தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!

news

மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

news

தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

news

மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!

news

கொளத்தூர் எம்எல்ஏ., வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி: சுவாசக் கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : ராஜினாமா செய்தவர்களை வேட்பாளராக்கிய தவெக

news

விஜய்யை DUMMY CM ஆக நினைக்கிறார்களா காவல்துறையினர்.. உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு

news

அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி

அதிகம் பார்க்கும் செய்திகள்