வலிகளில் வாழ்க்கை...!

Jan 24, 2026,01:13 PM IST

- பா.பானுமதி


நாட்கள் எல்லாம் 

வாட்களாய் வெட்ட 


ஆட்கள் எல்லாம் 

முட்களாய் குத்த


சுற்றி இருப்பவை எல்லாம்

சுத்திகளாக 


பற்றி இருப்பவை எல்லாம் 

கோடாரியாக 


மாற்றவும் முடியாமல் 

தேற்றவும் தெரியாமல் 




ஏற்றியும் கொள்ளாமல் 

ஆற்றவும் அறியாமல் 


தினம் தினம் திருப்பங்கள் 

திருக


களை இழந்த சிலைகளாய் 

விலை கொள்ள நிலை 


ஓடி ஓடி பாதங்கள்

உஷ்ணம் கொட்ட 


ஆடி அலைந்த தோள்கள் 

பூசனம் பிடிக்க 


தேடி அலைந்தது என்னவோ

தென்படவில்லை 


வாடி இருப்பது அறியாமை 

ஓடிக் கொண்டிருந்தால் புரியாமை 


நாடினாலும் சாடினாலும் 

விளைவுகள் விளங்காதவை 


அதிகமான அன்பும் எதிர்பார்ப்பில்லாத பண்பும் 

அடிபட்டு அடங்கும் 


அளவுகள் மாறினாலும்

பிளவுகள் உண்டாகும் 


தாமரை இலை தண்ணீரே 

சரியானது 


சித்தன் செயல்கள் முறையானது

ஆனால் அது...


அனுபவம் கிடைக்கும் வரை ஆடி 

அடங்கும் வரை புரியாதது 

பின்னர் 

நெஞ்சை விட்டு அகலாதது 


வாழ்க்கையின் பாதை புதிர் தான் 

வலிமிக்கது தான்..!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஓர் நதி ஓர் பெளர்ணமி ஓர் ஓடம்!

news

Forget your age... சாதிக்கும் எண்ணம் இருக்கும் வரை.. என்றும் நீங்கள் இளையவரே!

news

மாம்பழ பரிசு.. விஷாலின் விளையாட்டுகள் (12)

news

நெருக்கடியான தெருவில் கடைகளுக்கு நடுவே விடுதி.. அமர்நாத் பயண அனுபவங்கள் (2)

news

Paytm ஆப் வேலை செய்யுமா?.. மத்திய அரசு உத்தரவு கூறுவது என்ன?

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

அதிகம் பார்க்கும் செய்திகள்