- பா.பானுமதி
ஓடி கொண்டே இராதே
சற்றே
ஓய்வு எடுத்துக் கொள்
ஓவியமாக ஒளிரும் பொழுது
தேடி கொண்டே இராதே
சற்றே
திரும்பி பார் திருத்தமான காட்சிகள் தென் படும்

ஆடி கொண்டே இராதே
சற்றே
அமைதி கொள் அமைதியில் தான் ஆனந்தம் தெரியும்
நாடி கொண்டே இராதே
சற்றே
இளைப்பாற செய்
நாடி நரம்புகள் நலம் பலம் பெறும்
ஊடிக்கொண்டே இராதே சற்றே
கூடி இரு கூடுதலாக ஆயுள் கிடைக்கும்
சாடி கொண்டே இராதே சற்றே
சமாதானம் கொள் நாள்கள் சாமரம் வீசும்
வாசம் வீசு வசந்தம் பேசும்
சரியா.... சற்றே கேட்டு தான் பாரேன்
சங்கீதம்....!
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
Egypt Tour Diary: பேசும் சிலை!
தினம் தினம் கொண்டாட்டமா?
கொசுவின் அங்கலாய்ப்பு!
மறைந்தாலும் நன்று...!
Short Story: "யாரும்மா அது? ஞாயிற்றுக்கிழமைல!
உனைப் போற்றி வாழ்கின்ற என்னை வாழ வைக்கிறாய்!
சிந்தனைச் சிதறல்.. நமக்கு மறுக்கப்பட்டது.. அவர்களுக்கு வழங்கப்படுகிறது!
வட்ட நிலா பொட்டுக்காரி வாழைப்பூக் கொண்டக்காரி
வரலக்ஷ்மி வரம் அருள்வாய்!
{{comments.comment}}