- வர்ஷினி
சென்னை: மலையாளத்தில் ரகுமான் - பரத் இணைந்து நடித்த சயின்டிபிக் திரில்லர் படமான சமரா, தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் உருவாகியுள்ளது. இப்படம் அக்டோபர் 13ம் தேதி திரைக்கு வருகிறது.
பீகாக் ஆர்ட் ஹவுஸ் சார்பில் எம்.கே. சுபாகரன், அனுஜ் வர்கீஸ் வில்யாடத் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் “சமரா”. துருவங்கள் பதினாறு" படத்திற்கு பிறகு வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்கள், கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரகுமான் இப்போது ‘சமாரா’ படத்திலும்
அனைத்து தரப்பினரையும் வெகுவாக ஈர்க்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஹிந்தியில் பஜ்ரங்கி பாய்ஜான், ஜோலி எல்எல்பி 2, தமிழில் விஸ்வரூபம் 2 ஆகிய படங்களின் மூலம் பிரபலமான பாலிவுட் நடிகர் மீர்சர்வார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இயக்குநர் சார்லஸ் ஜோசப் படம் குறித்துக் கூறுகையில், குடும்ப சென்டிமென்ட்டுடன் திரில்லரைக் கலந்து கொடுத்துள்ளோம். கூடவே அறிவியலும் கலந்திருக்கும். விறுவிறுப்பான திரைக்கதை. அனைவராலும் ரசிக்கப்படும் பாராட்டப்படும் என்றார்.
அக்டோபர் 13ம் தேதி திரைக்கு வரும் இப்படம் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்று நம்பலாம்.
மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
மே 1.. ரத்தத்தால் எழுதப்பட்ட தியாக வரலாற்றின் நினைவுச்சின்னம்!
May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'
உலகத் தொழிலாளர்களே.. சிகாகோவில் ஒலித்து உலகெங்கும் பிரதிபலித்த உரிமைக் குரல்!
ஆற்றில் இறங்கிய அழகனைப் பார்!
RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்
ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)
Workers’ Day – A Note of Gratitude.. தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பின் மதிப்பும்!
Dr Thangalakshmi Poem on May day: உழைப்பின் உன்னத தினம்!
{{comments.comment}}