- பாரதிராஜன்
என் சிறிய வயதில் என் பாட்டி வீட்டிலேயே காபிக்கொட்டை அரைக்கும் ஒரு கருவியை பெஞ்ச்சில்
பிட் செய்து தேவைப்படும் போது ஏற்கனவே அரைத்து வைத்துள்ள காபிக்கொட்டையைப் பொடி செய்து பில்டரில் போட்டு இறக்கி காபி குடிக்க வரும். இது கிட்டத்தட்ட சுமாராக 15 வருடங்கள்நடந்தது.
அதன்பிறகு சிங்காரச் சென்னையான பழைய மாம்பலத்தில் வாசம். பழைய மாம்பலத்தில் லிங்கம் காபி,
ஜெயா காப்பி கடைகளில் காபிபொடி அரைக்க ஆரம்பித்தோம். இந்த கடைகளின் வாசலில் பெஞ்ச்சில் அன்றைய நாளிதழ்களான தினத்தந்தி, மாலை முரசு, வார இதழ்களான குமுதம், கல்கண்டு, விகடன், ராணி படிக்கவே செல்வேன்.

வாரத்தில் 3நாட்கள் காபிப்பொடி கடைகளில் வாசம் மறக்க முடியாத நினைவுகள். காபிக்கொட்டை அரைப்பது என்ற பெயரில் போய்ப் புத்தகம் படிப்பது. நூலகத்திற்கு வார விடுமுறை உண்டு. ஆனால் காப்பிப் பொடி கடைக்கு ஞாயிறு மாலை மட்டுமே விடுமுறை.
வார, மாத இதழ்கள் தொடர்ந்து படிக்க முடிந்தது. மறக்க முடியாத விஷயங்கள் இது.
(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}