சென்னை: அரசு கல்வி நிறுவனத்தில் ஜூனியர் கிளார்க் வேலைக்கு 199 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன.
இந்தியா முழுவதும் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 199 ஜூனியர் கிளார்க் பணிகளுக்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பணியில் சேர வேண்டும் என்றால் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அரசு கல்வி நிறுவனத்தில் ஜூனியர் கிளார்க் பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்ச வயது வரம்பு 30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, வயது வரம்பில் தளர்வு உண்டு. ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் வரையும், எஸ்சி/எஸ்டி பிரிவினர்களுக்கு 5 வருடங்கள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். எஸ்சி, எஸ்டி மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை. ஏனைய விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500 விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. கட்டணத்தை ஆன்லைன் வாயிலாக செலுத்தப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தகுதி உடையவர்கள் செயல்முறை தேர்வுகளில் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு ஆகிய முறைகளின் படி தேர்வர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 199 ஜூனியர் கிளார்க் பணியிடங்களுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் 19,900 முதல் 63,200 வரை சம்பளம் வழங்கப்படும்.
குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் மார்ச் 18ம் தேதி முதல் ஏப்ரல் 17ம் தேதிக்குள் https://bhu.ac.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக Register செய்து பின்னர் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை 7 மாவட்டங்களிலும், நாளைமறுநாள் 12 மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
பொன்முடி, சாமிநாதனுக்கு திமுக துணை பொதுச்செயலர் பதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
மாமல்லபுரத்தில் நாளை சிறப்பு பொதுக்குழு கூட்டம்: தவெக தலைமை அறிவிப்பு
தமிழக மக்களின் நலனை புறந்தள்ளி சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ள திமுக அரசை கண்டிக்கிறேன்: எடப்பாடி பழனிசாமி!
உலகக் கோப்பை கிரிக்கெட்... தொடர் நாயகி விருது வென்ற தீப்தி சர்மாவுக்கு DSP பதவி!
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு... அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!
கோவை துயரம் மனிதத்தன்மையற்றது.. கண்டிக்க கடுஞ்சொல் எதுவும் போதாது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
கோவையில் மாணவியிடம் அத்துமீறி அட்டூழியம் செய்த 3 குற்றவாளிகள்.. சுட்டுப் பிடித்த போலீஸ்
மீனவர்கள் கைது: ஒன்றிய-மாநில அரசுகள் இன்னும் எத்தனை காலத்திற்கு வேடிக்கை பார்க்கப்போகின்றன?: சீமான்
{{comments.comment}}