சென்னை: அரசு கல்வி நிறுவனத்தில் ஜூனியர் கிளார்க் வேலைக்கு 199 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன.
இந்தியா முழுவதும் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 199 ஜூனியர் கிளார்க் பணிகளுக்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பணியில் சேர வேண்டும் என்றால் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அரசு கல்வி நிறுவனத்தில் ஜூனியர் கிளார்க் பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்ச வயது வரம்பு 30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, வயது வரம்பில் தளர்வு உண்டு. ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் வரையும், எஸ்சி/எஸ்டி பிரிவினர்களுக்கு 5 வருடங்கள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். எஸ்சி, எஸ்டி மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை. ஏனைய விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500 விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. கட்டணத்தை ஆன்லைன் வாயிலாக செலுத்தப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தகுதி உடையவர்கள் செயல்முறை தேர்வுகளில் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு ஆகிய முறைகளின் படி தேர்வர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 199 ஜூனியர் கிளார்க் பணியிடங்களுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் 19,900 முதல் 63,200 வரை சம்பளம் வழங்கப்படும்.
குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் மார்ச் 18ம் தேதி முதல் ஏப்ரல் 17ம் தேதிக்குள் https://bhu.ac.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக Register செய்து பின்னர் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!
முன்னாள் புயல் டிட்வா.. இன்னும் சில நாட்கள் கடலோரமாகவே சுத்திருட்டிருக்குமாம்.. மழை நீடிக்கும்!
டெல்டா மாவட்டங்களை உலுக்கிய டிட்வா புயல். கனமழையால் விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு
அரசியல் சாசனத்தின் மீது ஆணையாக.. வித்தியாசமான உறுதிமொழி எடுத்து திருமணம்!
நடிகை சமந்தா ரகசிய திருமணம்...இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
திமுக ஆட்சியில் கொலை, கொள்ளைக்கு பஞ்சமே இல்லை... உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லை: அன்புமணி
கிளைமேட்டே மாறிப் போச்சு.. ஓவரா வேற குளிருது.. சூடா கற்பூரவல்லி இஞ்சி டீ குடிப்போமா?
சுயநலவாதி...துரோகி...கோபியில் செங்கோட்டையனை சரமாரியாக விமர்சித்த இபிஎஸ்
குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது...எதிர்கட்சிகளுக்கு பிரதமர் வேண்டுகோள்
{{comments.comment}}