பாட்னா: பீகாரைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னை கடித்த பாம்பை கெட்டியாக கையில் பிடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கையில் பாம்பை பிடித்தபடியே அவர் ஸ்டிரெச்சரில் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் கையில் இருந்த பாம்பை அவர் விட்ட பிறகே சிகிச்சையை தொடங்கினர் டாக்டர்கள்.
பீகார் மாநிலம் பகல்பூரைச் சேர்ந்தவர் பிரகாஷ் மண்டல். இவரை சம்பவத்தன்று ஒரு பெரிய கண்ணாடி விரியன் பாம்பு கடித்து விட்டது. கடும் விஷத்தன்மை கொண்ட இந்த பாம்புக் கடியால் அதிர்ச்சி அடைந்த பிரகாஷ், சுதாரித்துக் கொண்டு தன்னைக் கடித்த பாம்பை கெட்டியாக கையில் பிடித்துக் கொண்டு நடந்தே மருத்துவமனைக்கு வந்தார்.

அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அவர் வந்த விதத்தைப் பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு கட்டத்தில் நடக்க முடியாமல் அப்படியே வராண்டாவில் படுத்து விட்டார். அப்படியும் கூட கையில் இருந்த பாம்பை அவர் விடவில்லை. இதையடுத்து உடனடியாக ஸ்டிரெச்சர் கொண்டு வரப்பட்டது. அதில் அவரைத் தூக்கிப் போட்டு அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் கையில் பாம்பை வைத்துக் கொண்டிருந்த பிரகாஷிடம் செல்ல டாக்டர்கள் அஞ்சினர். இதையடுத்து அவர் பாம்பை கீழே விட்டார். அதன் பின்னர் பாம்பு பத்திரமாக பிடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது. அதன் பிறகு பிரகாஷுக்கு சிகிச்சை தொடங்கியது. அவரது நிலை என்ன என்று தெரியவில்லை. அவர் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
கண்ணாடி விரியன் பாம்பு மிகவும் விஷத் தன்மை வாய்ந்தது. இந்தியாவில் இது அதிக அளவில் காணப்படுகிறது. அதேபோல தைவான், ஜாவா போன்ற நாடுகளிலும் இது அதிகம் உள்ளது. இந்தியாவில் அதிக அளவில் பறிபோகும் உயிர்களுக்கு கண்ணாடி விரியன் பாம்புக் கடிதான் காரணம் என்று ஒரு புள்ளிவிவரத் தகவல் தெரிவிக்கிறது. காரணம் இவை அதிக அளவில் விவசாய நிலங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}