மதுரை: மதுரை வண்டியூர் அருகே பாஜக நிர்வாகி நடுரோட்டில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் சக்திவேல். 35 வயதான சக்திவேல் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். பாஜக ஓபிசி பிரிவு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் இன்று காலை அவருக்கு சொந்தமான குடோனுக்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது மர்ம நபர்கள் இவரை தொடர்ந்து சென்றுள்ளனர்.
அப்போது சக்திவேலை மர்ம நபர்கள் ஆயுதங்கலால் தாக்க முற்பட்ட போது, சக்தி வேல் தப்பித்து ஒட முயற்சி செய்துள்ளார். அவரை விடாது துரத்தி சென்ற மர்ம நபர்கள் சரமாரியாக சக்திவேலை தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த பாஜக நர்வாகி சக்திவேல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்து வந்த அண்ணாநகர் காவல்துறையினர். ரத்த வெள்ளத்தில் கிடந்த சக்திவேலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல் துறையினர் செய்த விசாரணையில் சக்திவேலுக்கும், மற்றொருவருக்கும் பிரச்சினை இருப்பது தெரியவந்தது. இவ்விருவருக்கும் சரக்கு வாகனம் விற்கப்பட்ட விவகாரத்தில் பிரச்சனை எழுந்துள்ளது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார் குற்றவாளிகளை கைது செய்துவதற்காக தேடி வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}