மதுரை: மதுரை வண்டியூர் அருகே பாஜக நிர்வாகி நடுரோட்டில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் சக்திவேல். 35 வயதான சக்திவேல் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். பாஜக ஓபிசி பிரிவு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் இன்று காலை அவருக்கு சொந்தமான குடோனுக்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது மர்ம நபர்கள் இவரை தொடர்ந்து சென்றுள்ளனர்.
அப்போது சக்திவேலை மர்ம நபர்கள் ஆயுதங்கலால் தாக்க முற்பட்ட போது, சக்தி வேல் தப்பித்து ஒட முயற்சி செய்துள்ளார். அவரை விடாது துரத்தி சென்ற மர்ம நபர்கள் சரமாரியாக சக்திவேலை தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த பாஜக நர்வாகி சக்திவேல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்து வந்த அண்ணாநகர் காவல்துறையினர். ரத்த வெள்ளத்தில் கிடந்த சக்திவேலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல் துறையினர் செய்த விசாரணையில் சக்திவேலுக்கும், மற்றொருவருக்கும் பிரச்சினை இருப்பது தெரியவந்தது. இவ்விருவருக்கும் சரக்கு வாகனம் விற்கப்பட்ட விவகாரத்தில் பிரச்சனை எழுந்துள்ளது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார் குற்றவாளிகளை கைது செய்துவதற்காக தேடி வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}