சென்னை: புது அடிமைகள் கிடைக்குமா என பாஜக தேடுகிறது. எத்தனை அடிமைகள் வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலில் தவெக கட்சி தனித்து தான் போட்டியிடும் என்று விஜய் திட்டவட்டமாக தெரிவித்து வந்தார். அதன்படி தான் விஜய்யும் பல்வேறு கட்சிப்பணிகளையும் செய்து வந்தார். மேலும் காங்கிரஸ் கட்சியுடன் விஜய் கூட்டணி வைக்க பேசி வருவதாகவும் தகவல்கள் பரவி வந்தது.
இந்நிலையில் கரூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் பூதாகரமாக உருவெடுத்தது. இதனையடுத்து விஜய்க்கு ஆதரவாக பாஜக குரல்கொடுத்து வந்தது. இதனால், பாஜகவுடன் விஜய் கூட்டணியில் இணைய உள்ளதாகவும் பல விதமாக கருத்துக்கள் பரவி வருகிறது. இது மட்டும் இன்றி அதிமுகவுடன் விஜய் கைகோர்க்க தற்போது பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திண்டுக்கலில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், பாஜகவுக்கு அடிமையாக அதிமுக கிடைத்துள்ளது. புதிய அடிமைகள் கிடைக்குமா என பாஜக தேடுகிறது. பாஜகவுக்கு புதிய அடிமைகள் கிடைக்கட்டும். எத்தனை அடிமைகள் வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது. கை நம்மை விட்டு எங்கும் போகாது. எனது கையை சொன்னேன் வேறு எதையும் நினைக்காதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன், சசிகலா நால்வர் கூட்டணியால் யாருக்கு பலம்.. யாருக்கு பலவீனம்?
கோவையில் கடத்தப்பட்ட இளம் பெண்ணை மீட்க என்ன நடவடிக்கை?... டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கும், நாளை 4 மாவட்டங்களுக்கும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதில் காலதாமதமா? ஆளுநர் மாளிகை விளக்கம்
கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி: செங்கோட்டையன் பேட்டி!
பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதற்கு திமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டாமா?:எடப்பாடி பழனிச்சாமி
யாரும் செய்யாத பித்தலாட்டம்..திருச்சியில் கூட தங்காமல் விஜய் சென்னைக்கு ஓடி விட்டார்: வைகோ ஆவேசம்!
ஜனநாயகத்தை பாதுகாக்க திமுகவினர் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மோடியுடன் பேச்சுவார்த்தை சிறப்பாக உள்ளது.. இந்தியா வரப் போகிறேன்.. அதிபர் டிரம்ப் தகவல்
{{comments.comment}}