புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடரில்.. ஆளுக்கு ஒரு பலாப்பழம்.. கலகலக்க வைத்த பாஜக எம்எல்ஏ!

Mar 27, 2025,06:33 PM IST

புதுச்சேரி:  புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று, காலாப்பட்டு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாண சுந்தரம், தனது  தோட்டத்தில் விளைந்த பலாப்பழத்தை முதல்வர், சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கினார்.


புதுச்சேரியின் 2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் கடந்த மார்ச் 12ஆம் தேதி அம்மாநிலமுதல்வர் என். ரெங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதனை வரி இல்லாத பட்ஜெட் என்றும் அறிவித்திருந்தார். இதில் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகி இருந்தன.




குறிப்பாக, புதுச்சேரி சுகாதாரத்துறையில் பணிபுரியும் ஆஷா பணியாளர்களுக்கு ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக ஊதியம் உயர்த்தி வழங்கப்படும்.  புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிகளை இணைத்து புதுச்சேரி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.


500 பள்ளிகளில் பெண் பிள்ளைகள் தங்களது குறைகளை தெரிவிக்க புகார் பெட்டி வைக்கப்படும் என்ற அறிவிப்புகள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதமும், கேள்வி நேரமும் நடைபெற்று வந்தது.  


இந்த நிலையில், புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று முதல்வர் ரெங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடினர். அப்போது புதுச்சேரி கலாபட்டு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாண சுந்தரம் என்பவர் தனது தோட்டத்தில் விளைந்த பலாப்பழங்களை சட்டமன்ற பட்ஜெட் கூட்டுத்தொடரின் இறுதி நாளான இன்று கொண்டு வந்தார்.




பிறகு கொண்டுவந்த பலாப்பழங்களை முதலமைச்சர் ரெங்கசாமி, சபாநாயகர்  செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கினார்.  சட்டசபை வளாகத்திற்குள் ஏகப்பட்ட பலாப் பழங்கள் வந்ததால் சட்டசபை முழுவதுமே பலாப்பழ வாசனை தூக்கியது.


இப்போது பலாப்பழ சீசனாகும். குறிப்பாக புதுச்சேரி சுற்றுப் பகுதிகள், தமிழ்நாட்டின் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் பலாப்பழம் அதிக அளவில்  விளையும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு

news

இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

news

உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?

news

Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு

news

மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!

news

உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?

news

Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி

news

சந்தோஷம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்