சென்னை: ஒரு பெண் அமைச்சர் முதல்வராகும் கனவுடன் டேரா போட்டவர்.. நீ வா போ என மரியாதை குறைவாக.. முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பேசிய ஒருமை வார்த்தைகள் கடும் கண்டனத்திற்குரியது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
திமுக எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, முதல்வராக ஆசைப்பட்டு நிர்மலா சீதாராமன் மூன்று மாதங்கள் தமிழகத்திலேயே தங்கி இருந்தார். அப்போது நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படும் என கூறியிருந்தார். ஆனால் இப்போது நீட் விவகாரம் தொடர்பாக எதுவும் கூறாமல், வேறு மாதிரி பேசுகிறார்.
ஜிஎஸ்டி வரி தொடர்பாக கேள்வி எழுப்பியது தவறா..? இதற்காக மிரட்டுவதும் சரியா..? அதேபோல் குஜராத்தில் மட்டும் இந்தியில் பேசினால் மரியாதை.. தமிழ்நாட்டில் மட்டும் தமிழில் பேசினால் மரியாதை இல்லையா என கடுமையாக விமர்சித்து இருந்தார். அவரது பேச்சுக்கு, கடும் கண்டனம் தெரிவித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அறிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
இதுதான் உங்கள் திராவிடத்தின் வளர்ப்பா திரு. தயாநிதி மாறன் அவர்களே?
நமது மத்திய அமைச்சரவையில் முக்கிய பொறுப்பில் இருக்கும், ஒரு பெண் அமைச்சரைப் பற்றி, “முதல்வராகும் கனவுடன் டேரா போட்டவர்” என்ற பொய் அவதூறுகளைப் பரப்புவதும், “நீ, வா, போ” என மரியாதையும் நாகரிகமுமின்றி பொதுவில் ஒருமையில் பேசுவதும் கடும் கண்டனத்திற்குரியது.
ஒரு பெண் அரசியலிலும் அதிகாரத்திலும் வளர்ந்து வந்தால், நீங்களும் உங்கள் கட்சிக்காரர்களும், கூட்டணிக் கட்சித் தலைவர்களும், உங்கள் கூலிப்படைப் பேச்சாளர்களும் அவர்களை எத்தனை கீழ்த்தரமாக விமர்சிக்கவும் தயங்க மாட்டீர்கள் என்பதை நாங்கள் கண்டிருக்கிறோம்.
ஆனால், நமது மத்திய நிதியமைச்சரான திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களைப் பற்றி, நீங்களும் உங்கள் கூட்டணிக் கட்சித் தலைவரான திரு. ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களும் மாறி மாறி சர்ச்சைக்குரிய கருத்துக்களால் காழ்ப்புடன் விமர்சிக்கிறீர்களே, இதுதான் திராவிடத்தின் கொள்கையா? இதைத்தான் இண்டி கூட்டணியே தங்கள் கொள்கையாக முழங்குகிறீர்களா?
ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள உங்களுக்கு, முதல் பெண் பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவி வகித்த நமது மத்திய நிதியமைச்சரைப் பற்றி பேச குறைந்தபட்ச தகுதியாவது இருக்கிறதா?
எனவே, அரசியலில் வளர்ந்து வரும் பெண்களையும், அதிகாரத்தில் மிளிரும் பெண்களையும் கண்டு அஞ்சி, பொறாமையில் பொங்கி இப்படி மட்டமான கருத்துக்களால் விமர்சிப்பதை விட்டுவிட்டு, உங்கள் கட்சியனருக்கே பழக்கமில்லாத “நாகரிக அரசியலை” நீங்களாவது முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம் என கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அமைச்சராகப் பதவியேற்றார் மனோ தங்கராஜ்.. மீண்டும் பால்வளத்துறையே ஒதுக்கீடு செய்யப்பட்டது!
நான் கேட்டதும் ஷாருக்கான் செய்த அந்த செயல்.. நெகிழ்ச்சியுடன் நினைவு கூறும் வாசிம் அக்ரம்
வங்கி வேலைக்கு Goodbye சொல்லி விட்டு.. Audi கார் மூலம் பால் விற்பனை செய்யும் இளைஞர்.!
கடற்படைக்காக.. 26 ரபேல் போர் விமானங்களை பிரான்சிடமிருந்து வாங்கும் இந்தியா!
அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி.. ரைமிங்காக பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின்..!
தமிழ்நாட்டில் இன்று முதல் மே 4 வரை.. டமால் டுமீலுடன்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!
மே 4ல் அக்னி நட்சத்திரம்.. வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!
கலவரத்தை தூண்டும் வகையில் வீடியோ.. பாகிஸ்தான் youtube சேனல்களுக்கு மத்திய அரசு தடை
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!
{{comments.comment}}