சென்னை: ஒரு பெண் அமைச்சர் முதல்வராகும் கனவுடன் டேரா போட்டவர்.. நீ வா போ என மரியாதை குறைவாக.. முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பேசிய ஒருமை வார்த்தைகள் கடும் கண்டனத்திற்குரியது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
திமுக எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, முதல்வராக ஆசைப்பட்டு நிர்மலா சீதாராமன் மூன்று மாதங்கள் தமிழகத்திலேயே தங்கி இருந்தார். அப்போது நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படும் என கூறியிருந்தார். ஆனால் இப்போது நீட் விவகாரம் தொடர்பாக எதுவும் கூறாமல், வேறு மாதிரி பேசுகிறார்.
ஜிஎஸ்டி வரி தொடர்பாக கேள்வி எழுப்பியது தவறா..? இதற்காக மிரட்டுவதும் சரியா..? அதேபோல் குஜராத்தில் மட்டும் இந்தியில் பேசினால் மரியாதை.. தமிழ்நாட்டில் மட்டும் தமிழில் பேசினால் மரியாதை இல்லையா என கடுமையாக விமர்சித்து இருந்தார். அவரது பேச்சுக்கு, கடும் கண்டனம் தெரிவித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அறிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
இதுதான் உங்கள் திராவிடத்தின் வளர்ப்பா திரு. தயாநிதி மாறன் அவர்களே?
நமது மத்திய அமைச்சரவையில் முக்கிய பொறுப்பில் இருக்கும், ஒரு பெண் அமைச்சரைப் பற்றி, “முதல்வராகும் கனவுடன் டேரா போட்டவர்” என்ற பொய் அவதூறுகளைப் பரப்புவதும், “நீ, வா, போ” என மரியாதையும் நாகரிகமுமின்றி பொதுவில் ஒருமையில் பேசுவதும் கடும் கண்டனத்திற்குரியது.
ஒரு பெண் அரசியலிலும் அதிகாரத்திலும் வளர்ந்து வந்தால், நீங்களும் உங்கள் கட்சிக்காரர்களும், கூட்டணிக் கட்சித் தலைவர்களும், உங்கள் கூலிப்படைப் பேச்சாளர்களும் அவர்களை எத்தனை கீழ்த்தரமாக விமர்சிக்கவும் தயங்க மாட்டீர்கள் என்பதை நாங்கள் கண்டிருக்கிறோம்.
ஆனால், நமது மத்திய நிதியமைச்சரான திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களைப் பற்றி, நீங்களும் உங்கள் கூட்டணிக் கட்சித் தலைவரான திரு. ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களும் மாறி மாறி சர்ச்சைக்குரிய கருத்துக்களால் காழ்ப்புடன் விமர்சிக்கிறீர்களே, இதுதான் திராவிடத்தின் கொள்கையா? இதைத்தான் இண்டி கூட்டணியே தங்கள் கொள்கையாக முழங்குகிறீர்களா?
ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள உங்களுக்கு, முதல் பெண் பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவி வகித்த நமது மத்திய நிதியமைச்சரைப் பற்றி பேச குறைந்தபட்ச தகுதியாவது இருக்கிறதா?
எனவே, அரசியலில் வளர்ந்து வரும் பெண்களையும், அதிகாரத்தில் மிளிரும் பெண்களையும் கண்டு அஞ்சி, பொறாமையில் பொங்கி இப்படி மட்டமான கருத்துக்களால் விமர்சிப்பதை விட்டுவிட்டு, உங்கள் கட்சியனருக்கே பழக்கமில்லாத “நாகரிக அரசியலை” நீங்களாவது முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம் என கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!
திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
{{comments.comment}}