ரெய்டெல்லாம் எதுக்கு .. எடப்பாடி பழனிச்சாமியிடம் பேசினாலே கூட்டணி உருவாகிடுமே.. நயினார் நாகேந்திரன்

Jan 23, 2025,05:01 PM IST

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நேரடியாக பேசினாலே போதும். கூட்டணி அமைந்துவிடும். கூட்டணிக்காக ஐடி ரெய்டு மூலம் பணிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறியுள்ளார் தமிழ்நாடு பாஜகவின் சட்டசபைக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன்.


கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும், 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது.  இதில் 2019 தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே கூட்டணிக்கு வெற்றி கிடைத்தது. அதுவும் அதிமுக மட்டுமே வென்றது. 2021 சட்டசபைத் தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவி ஆட்சியையும் இழந்தது.  இதையடுத்து இரு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணி உடைந்தது. 


2024 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி இரண்டாகப் பிரிந்து தனித்தனியாக  போட்டியிட்டது. இதில் இரண்டு அணிகளுமே ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் கடும் தோல்வியை சந்தித்தது. அந்த சமயத்தில் எப்போதும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்க போவதில்லை என எடப்பாடி பழனிச்சாமி தீர்மானமாக அறிவித்திருந்தார். 




இருந்தாலும் கூட அதிமுக பாஜக இடையே மறைமுக கூட்டணி என அமைத்திருப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகளும் காரசாரமாக விவாதித்து வருகிறனர். அதிமுக தரப்பி்ல ஜெயக்குமார்தான், கூட்டணி தொடர்பாக எப்போதுமே பதில் கூறி வருகிறார். இந்த நிலையில் அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி சேர பாஜக தரப்பில் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். சமீபத்தில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் அதிமுகவுடன் கூட்டணியில் சேர விருப்பம் இருப்பதாக   தெரிவித்து இருந்தார்.


இந்த நிலையில் பாஜக குழு தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று திருநெல்வேலி சென்றபோது செய்தியாளர்கள் சீமானின் பெரியார் குறித்த விவாதங்கள், திருநெல்வேலியின் ஸ்மார்ட் சிட்டி, சட்டசபையில் எதிர்க்கட்சியின் கோரிக்கை நிறைவேற்றப்படுகிறதா..? என பல்வேறு கேள்விகள் ரகேட்டனர். மேலும் ஐடி சோதனை மூலம் எடப்பாடி பழனிச்சாமியை மிரட்டி அதிமுகவுடன் கூட்டணி உருவாகிறதா..? என்ற கேள்விக்கு,  அவர் பதிலளிக்கையில், வருவான வரித்துறை சோதனை என்பது யார் வீட்டில் பணம் இருக்கிறதோ அவர்கள் வீட்டில் தான் நடைபெறும். திமுக பக்கம் கூட சோதனை நடக்கிறது. ஏன் உங்கள் வீட்டில் பணம் இருந்தால் கூட உங்கள் வீட்டிலும் ரெய்டு வரும். ரெய்டு மூலமாக பணிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்கும் கூட்டணி வற்புறுத்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 


அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமியுடன் பாஜக நேரடியாக பேசினாலே போதும். கூட்டணி அமைந்து விடும். ஐடி சோதனை மூலம் பிற கட்சியை மிரட்டி கூட்டணி சேர வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை என பதில் அளித்தார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்