மு.க.ஸ்டாலின் போன கமலாலயம்.. அவர் கொடுத்த "பன்ச்"சை.. அவருக்கே திருப்பிக் கொடுத்த பாஜக!

Feb 22, 2023,12:42 PM IST
சென்னை: திருவாரூர் கமலாலயம் குளத்திற்குப் போன முதல்வர் மு.க.ஸ்டாலின் அதுகுறித்து ஒரு புகைப்படம் போட்டார்.. அதற்கு தனது பாணியில் பாஜக பதில் கொடுத்துள்ளது.



முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் போயிருந்தார். அப்போது அங்குள்ள புகழ்பெற்ற கமலாலயம் குளத்திற்குப் போன அவர் அங்கு அமர்ந்து மலரும் நினைவுகளில் மூழ்கினார். இதுகுறித்த புகைப்படங்களையும் அவர் போட்டுள்ளார்.



அதில் ஸ்டாலின் கூறுகையில்,  கலைஞர் வளர்ந்த திருவாரூரில் உள்ள கமலாலயம், கடல் போலத் ‘தோற்றமளிக்கும்’. ஆனாலும் அது குளம்தான். அதன் ‘நடுவண்’ கோயில் படிக்கட்டுகளை அடைவதற்கான எதிர்நீச்சலை நெஞ்சுக்கு நீதியில் விளக்கியிருப்பார் தலைவர்.  இன்று அந்தப் படிக்கட்டுகளில் அமர்ந்து மகிழ்ந்தபோது, குளத்தின் அலைகளில் என் சிறு வயது நினைவுகள். நெஞ்சத்தில் என்றும் நினைவலைகளாக முத்தமிழறிஞர் என்று கூறியிருந்தார் மு.க.ஸ்டாலின்

ஸ்டாலின் போட்ட இந்த டிவீட்டுக்கு தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது பாணியில் கலகலப்பான பதில் கொடுத்துள்ளார். அவர் போட்டுள்ள பதில் டிவீட்:

'கமலாலயம்' ஒரு கோவில் தான். படிக்கட்டுகளில் அமர்ந்து பாற்கடல் போல் குளம் தோற்றமளிப்பதற்கு காரணம் 'நடுவண்' அரசை திருமாலை போல் காத்து கொண்டிருக்கும்  பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தான். அக் குளத்தில் மிதந்து வரும் நடுவண் அரசின் திட்டங்கள் என்ற அலைகளை படிக்கட்டுகளில் அமர்ந்து மகிழ்கிறீர்கள் என்று அதில் போட்டுள்ளார் நாராயணன் திருப்பதி.

ஸ்டாலின் கமலாலயம் குளத்தைப் பற்றி சொல்லி கூடவே "நடுவண்" அரசுக்கும் ஒரு பன்ச் வைத்திருந்தார்.. ஆனால் அந்த "பன்ச்"சை வாங்கி அவருக்கே திருப்பி விட்டுள்ளார் நாராயணன் திருப்பதி.. இப்படி ஆரோக்கியமாக "மோதிக்" கொண்டால் நல்லாத்தான் இருக்கு.. எல்லோரும் இப்படி டீசன்ட்டாக சண்டை போடலாமே!

சமீபத்திய செய்திகள்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

news

சிந்தனைச் சிதறல்.. நாளைய வளர்ச்சியின் அடிநாதமாய் அமைவது எது தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்