10 மாவட்டங்களில் பிரமாண்ட பாஜக அலுவலகங்கள்.. மார்ச் 10ம் தேதி தொடங்கி வைக்கிறார் நட்டா

Mar 07, 2023,10:00 AM IST
சென்னை: தமிழ்நாட்டில் கட்டப்பட்டுள்ள 10 மாவட்ட பாஜக அலுவலகங்களைத் திறந்து வைக்க தேசிய பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தமிழ்நாடு வருகிறார்.

நாடு முழுவதும் பாஜக தனது பலத்தை அதிகரித்து வருகிறது. அடி மட்டத் தொண்டர்களிடையே  கட்சியை பலப்படுத்தும் வகையில் மாவட்டங்களில் தலைமை அலுவலகங்களை அது திறந்து வருகிறது.

தமிழ்நாட்டிலும் புதிதாக மாவட்ட தலைமை அலுவலகக் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.  அதில் பத்து அலுவலகங்கள் திறப்பு விழாவுக்குத் தயாராகி விட்டன. இதையடுத்து  அவற்றைத் திறந்து வைக்க பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மார்ச் 10ம் தேதி தமிழ்நாடு வருகிறார்.





கிருஷ்ணகிரியில் மார்ச் 10ம் தேதி நடைபெறும்  விழாவில் கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலகத்தை அவர் திறந்து வைக்கவுள்ளார்.  அதே நிகழ்ச்சியில் திருச்சி, புதுக்கோட்டை, தூத்துக்குடி, நாமக்கல், தர்மபுரி, திருவள்ளூர்  உள்ளிட்ட பிற 9 மாவட்டங்களுக்கான அலுவலகக் கட்டடங்களையம் நட்டா திறந்து வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நட்டா வருகை மிக முக்கியமான காலகட்டத்தில் நடைபெறுகிறது. தமிழ்நாடு பாஜகவில் பெரும் குழப்பம் நிலவுகிறது. படிப்படியாக பல்வேறு தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறுகின்றனர். மாநிலத் தலைவர் அண்ணாமலையும் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். அவர் மீதும் பல்வேறு புகார்களை கட்சியினரே வைக்கின்றனர். இந்த நிலையில் நட்டா வருகையின்போது இதுகுறித்தெல்லாம் அவர் அண்ணாமலையுடன் பேசலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம், நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும் மாநில பாஜக உயர் மட்டக் குழுவுடன் அவர் கலந்து ஆலோசிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்