செல்வப் பெருந்தகை அவர்களே.. இதுதான் காங்கிரஸின் ராஜ தந்திரமா.. கேள்விகளை அடுக்கிய அண்ணாமலை!

Jan 22, 2025,06:42 PM IST

சென்னை: கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தெரிவித்த கருத்துக்களைத் தொடர்ந்து பல்வேறு கேள்விகளை அவருக்கு முன் வைத்துள்ளார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.


இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை:


தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை,  கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தது, மறைந்த திருமதி இந்திரா காந்தி அவர்களின் ராஜதந்திரம் என்று கூறுகிறார்.  


எங்களுக்கு சில கேள்விகள்.  




கடந்த 30 ஆண்டுகளில், இலங்கை அரசால், பல்லாயிரக்கணக்கான இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தான் அந்த ராஜதந்திரமா? 


பலநூறு இந்திய மீனவர்கள் நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்பட்டனரே. அதுவும் உங்கள் ராஜதந்திரம் தானா? 


மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டதால் வாழ்வாதாரத்தை இழந்தார்கள் நம் தமிழக மீனவ சொந்தங்கள். இதுவும் ராஜதந்திரத்தில் தான் அடங்குமா?   


கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்தபோது, அன்று தமிழகத்தில் ஆட்சியிலிருந்த திமுக, கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுக்க முழு சம்மதம் தெரிவித்துத் தமிழக மீனவ மக்களுக்குத் துரோகம் செய்ததோடு, கடந்த ஐம்பது ஆண்டுகளாக, ஒவ்வொரு தேர்தலின் போதும், தமிழக மீனவர்கள் பாதுகாப்பு, தமிழர்கள் உரிமை, என்றெல்லாம் நாடகமாடிக் கொண்டிருக்கிறது. 


அப்போதெல்லாம் இந்த ராஜதந்திரத்தைப் பற்றித் திமுக காங்கிரஸ் கூட்டணி பேசியதில்லையே ஏன்?


தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகை சொல்வது போலக் கச்சத்தீவைத் தாரைவார்த்தது ராஜதந்திரம் என்று ஒப்புக்கொள்வாரா தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின்? என்று அண்ணாமலை கேட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

"என்ன மீரா... ஒரு மாதிரியா பார்க்குற?".. (நீ மழை - 6)

news

யாருடன் கூட்டணி? இன்று அறிவிக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்

news

ஆஸ்கர் 2026 விருது பெற்றவர்களின் முழு பட்டியல்

news

Monday Motivation: நரியும் திராட்சையும்!

news

மதுரை அரசரடியில்.. சாலைப் பராமரிப்பு என்ற பெயரில் பொதுமக்கள் அவதி!

news

தமிழ்நாடு சட்டசபைக்கு ஏப்ரல் 23, புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ம் தேதி தேர்தல்.. மே 4ல் வாக்கு எண்ணிக்கை

news

TN Assembly Elections: தமிழ்நாட்டில் 75,032 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.. தேர்தல் ஆணையம்

news

தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள்.. இதையெல்லாம் பின்பற்றணும்!

news

விஜய் பையில் கத்திரிக்கோல்.. ஆதவ் அர்ஜூனாவிடம் மது பாட்டில்.. பரபரத்த சென்னை ஏர்போர்ட்!

அதிகம் பார்க்கும் செய்திகள்