சென்னை: விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ராதிகாவுக்கு எதிராக பாஜக நிர்வாகியான வேதா சுயேட்சையாக போட்டியிடுவதால் அக்கட்சிக்குள்ளையே பரபரப்பு நிலவி வருகிறது.
சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்துக் கொண்டார். இதையடுத்து அவரது மனைவி ராதிகா விருதுநகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ராதிகா சரத்குமார் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்த பின்பு வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து விருதுநகர் தொகுதியில் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ராதிகா வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக நிர்வாகியான டாக்டர் வேதா என்பவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதற்காக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனிடம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார் டாக்டர் வேதா. பாஜகவில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக ராதிகா வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், பாஜக நிர்வாகியான வேதா இன்று மனு தாக்கல் செய்திருப்பது தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து டாக்டர் வேதா செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் மதுரை மேற்கு மாவட்ட பாஜக விவசாய அணி செயற்குழு உறுப்பினராக இருக்கிறேன். திருமங்கலத்தில் மருத்துவராக பணிபுரிகிறேன். பாஜகவில் சீட் கொடுக்கவில்லை. அதனால் தான் தனி அணியாக "டெல்லி பாஜக மோடி அணி" சார்பாக நான் போட்டியிடுகிறேன்.
தமிழக பாஜக மோடி அணி சார்பாக போட்டியிடவில்லை. நான் தனி அணியாக நிற்கின்றேன். ரூல்ஸ் இருக்கு. எந்த பிரச்சனையும் இல்லை. ராதிகாவை எதிர்த்து நிற்கவில்லை. அவர்களே ஏத்துக்கிட்டாங்க. பாஜகவை எதிர்த்தும் நிற்கவில்லை. எல்லோரையும் எதிர்த்து தான் போட்டியிடுகிறேன்.
பிரதமர் நரேந்திர மோடி கேரண்டி கொடுத்ததினால தான் நான் தனியாக போட்டியிடுகிறேன். தமிழக பாஜக, டெல்லி பாஜக என ஏன் பிரிக்கிறீங்க என செய்தியாளர்கள் கேட்டதற்கு, காங்கிரசை மட்டும் இந்தியா காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் என ஆயிரம் காங்கிரஸ் ஆக பிரித்திருக்கிறார்கள். அதை ஏன் கேள்வி கேட்கவில்லை. பாஜகவில் இருந்து வரக்கூடாதா. தப்பே கிடையாது என்ன தடாலடியாக பேசினார் வேதா.
இவர் சீரியஸாக போட்டியிடுகிறாரா அல்லது வேற காரணமா என்று தெரியவில்லை.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}