சென்னை: தமிழகத்தில் 14, புதுச்சேரியில் ஒன்று என மொத்தம் 15 பேர் கொண்ட வேட்பாளர்களின் 2வது பட்டியலை வெளியிட்டது பாஜக. இதில் பாஜக சார்பில் விருதுநகர் லோக்சபா தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக வேட்பாளர்கள் 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளனர். மேலும், தாமரை சின்னத்தில் மாற்று கட்சியைச் சேர்ந்தவர்கள் 4 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.தமிழகம் மற்றும் புதுச்சேரி தொகுதிகளில் பாஜக கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜகவின் 9 வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2வது கட்ட வேட்பாளர்களின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது பாஜக. இந்த பட்டியலில் 15 பேட்பாளர்கள் இடம் பிடித்துள்ளனர்.
பாஜக 2 வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
1. விருதுநகர் -ராதிகா சரத்குமார்
2. வடசென்னை - வழக்கறிஞர் பால் கனகராஜ்
3. நாமக்கல் -கே.பி.ராமலிங்கம்
4. திருப்பூர் - ஏ.பி.முருகானந்தம்
5. சிதம்பரம் (தனி) - கார்த்தியாயினி
6. திருவள்ளூர் (தனி) - பொன்.வி.பாலகணபதி
7. திருவண்ணாமலை - அஸ்வதாமன்
8. பொள்ளாச்சி - கே.வசந்தராஜன்
9. கரூர் - வி.வி.செந்தில்நாதன்
10. நாகப்பட்டினம் (தனி) - எஸ்ஜிஎ ரமேஷ்
11. தஞ்சை - எம்.முருகானந்தம்
12. சிவகங்கை - தேவநாதன் யாதவ்
13. மதுரை - பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன்
14. தென்காசி (தனி) - பி.ஜான் பாண்டியன்
15. புதுச்சேரி - நமச்சிவாயம்
ஆகியோர் பாஜக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களாகும்.
நேற்று வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில்,
தென் சென்னை - தமிழிசை செளந்தரராஜன்
மத்திய சென்னை - வினோஜ் பி.செல்வம்
வேலூர் - ஏ.சி.சண்முகம்
கிருஷ்ணகிரி - சி.நரசிம்மன்
நீலகிரி (தனி) - எல்.முருகன்
கோவை - கே.அண்ணாமலை
பெரம்பலூர் - டி.ஆர்.பாரிவேந்தர்
தூத்துக்குடி - நயினார் நாகேந்திரன்
கன்னியாகுமரி - பொன்.ராதாகிருஷ்ணன்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}