சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் 39 தொகுதிக்கான பங்கீடு முடிந்துள்ள நிலையில், இன்று மாலை தொகுதி பங்கீடுக்கான வேட்பாளர் பட்டியலை டெல்லியில் இருந்து அக்கட்சி தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக ஏற்கனவே தொகுதி பங்கீட்டை முடித்து தற்போது எந்தத் தொகுதியில்.. எந்த வேட்பாளர்கள்.. போட்டியிடுவார்கள் என்ற வேட்பாளர் பட்டியலையும் அறிவித்துவிட்டது. இந்நிலையில் பாஜக கூட்டணியில் இன்று தொகுதி பங்கீடு முடிவுக்கு வந்தது.

புதிய நீதிக் கட்சி, ஐ.ஜே.கே, இ.ம.க.மு.க, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சிக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாமகவுக்கு 10 தொகுதிகளும், அமமுகவுக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஜி.கே.வாசன் கட்சிக்கு 3 தொகுதிகள் தரப்பட்டுள்ளன.
இது பற்றி மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில்,
லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் 39 தொகுதிக்கான தொகுதி பங்கீடு இன்று முடிந்துள்ளது. இதில் பாஜக தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஜி.கே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் மூன்று தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. மேலும் கூட்டணி கட்சிகள் தாமரை சின்னத்தில் 4 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
பாஜகவின் வேட்பாளர் பட்டியல் இன்று மாலை டெல்லியில் இருந்து கட்சி தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். பாஜக சார்பில் கூட்டணிக் கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை விரைவில் அறிவிப்பார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் , டிடிவி தினகரன் அணி, உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்த அறிவிப்பை அவர்களே விரைவில் அறிவிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்கள் தாமரைச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனை பாஜக தரப்பில் அளிக்கப்பட்டது. அதற்கு ஓபிஎஸ் தரப்பு மறுப்பு தெரிவித்தது. இதன் அடிப்படையில் தொகுதி பங்கீட்டில் ஒரு தொகுதி கூட ஓபிஎஸ் தரப்பினருக்கு ஒதுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வாழ்க்கை ஒரு கனவா?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
{{comments.comment}}