தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டால்தான் வளர முடியும்.. பாஜகவுக்கு சாமி அட்வைஸ்

Feb 11, 2023,12:41 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சிப் பணிகளை இன்னும் செய்யவே இல்லை. தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபைத் தொகுதிகளிலும் அது தனித்துப் போட்டியிட வேண்டும். அப்படிச் செய்தால்தான் அது வளர முடியும் என்று சுப்ரமணியம் சாமி கூறியுள்ளார்.


பாஜகவில் உள்ள மூத்த தலைவர் சுப்பிரமணியம் சாமி, அவ்வப்போது பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களை விமர்சித்துக் கருத்துக்களைக் கூறுவது வழக்கம். குறிப்பாக நிர்மலா சீதாராமன் போன்ற தலைவர்களை கடுமையாக விமர்சிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார்.


இந்த நிலையில் சென்னை வந்த அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்  கூறுகையில், தமிழ்நாட்டில் தன்னை வளர்த்துக் கொள்ள பாஜக பெரிதாக எதையும் செய்யவில்லை. கட்சி வளர வேண்டும் என்றால் 234 சட்டசபைத் தொகுதிகளிலும் தனியாக போட்டியிட வேண்டும். அனைத்து லோக்சபா தொகுதிகளிலும் தனியாக போட்டியிட வேண்டும். அப்படிச் செய்தால்தான் தொண்டர் பலம் அதிகரிக்கும். மக்களிடம் நம்பிக்கை உருவாகும். வளர முடியும்.


ஆனால் இங்கு என்ன செய்கிறார்கள்.. அதிமுக, திமுக என மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்கிறார்கள். இது வளர உதவாது. பிற மாநிலங்களில் அப்படி இல்லை. தைரியமாக தனித்து போட்டியிடுகிறார்கள். கட்சியை வளர்க்க முயற்சிக்கிறார்கள். இங்கு அப்படி எதுவும் இல்லை.


அடுத்த பிரதமர் யார் என்பதை பாஜகதான் அறிவிக்க வேண்டும். மோடிதான் மீண்டும் பிரதமரா என்பதை இப்போதே கூற முடியாது. அதை பாஜக மேலிடம்தான் அறிவிக்க வேண்டும் என்றார் சாமி.


ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு அளித்துள்ளது குறித்துக் கேட்டபோது, காங்கிரஸுக்கு இருக்கிற வாக்குகளும் கிடைக்காமல் போகப் போகிறது என்றார் சாமி.


சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்