சிவகங்கை: சிவகங்கையில் ப்ளூடூத் ஹெட்போன் மூலம் பாட்டு கோட்டுக்கொண்டு தூங்கியவரின் காதில் இருந்த ஹெட்போன் வெடித்ததில் முதியவர் காது படுகாயம் அடைந்தது.
இன்றைய நவீன காலத்தில் பல டெக்னாலஜிக்கள் வந்துவிட்டன. இந்த டெக்னாலஜி வளர்ச்சியினால் பல நன்மைகள் இருந்தாலும், சில ஆபத்தான விஷயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. இதனை நாம் மறுக்கமுடியாது. டெக்லாஜியை சரியான முறையில் பயன்படுத்தாமல் அவரவர்களுக்கு எற்றார் போல் பயன்படுத்துவதினால் ஏற்படும் பாதிப்புகள் இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து விட்டது என்றே சொல்லலாம்.

குறிப்பாக, நம்மில் பெரும்பாலானவர்கள் பல நேரங்களில் மொபைல்போன் அல்லது கம்ப்யூட்டர்களில் ஹெட்போன்கள் மூலம் பாட்டு கேட்பதை வழக்கமாக வைத்துள்ளோம். அதிலும் முக்கியமாக போனை ஜார்ஜ் போட்டுக்கொண்டே பேசியும் வருகிறோம். இவ்வாறாக பாதுகாப்பற்ற முறையில் மின்னனு சாதனங்களை பயன்படுத்துவதினால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. அப்படி தான் தற்பொழுது ஒரு சம்பவம் நடந்துள்ளது. எங்கு தெரியுமா?
சிவகங்கையில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ளது மாத்துக்கண்மாய் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்தவர் தான் விவசாயி பன்னீர்செல்வம். இவர் தினமும் ப்ளூடூத் ஹெட்போன் மூலம் பாட்டு கேட்பதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். அப்படி தான் அவர் தூங்கும் போது ஹெட்போனை ஆன் செய்து விட்டு பாட்டு கேட்டுக்கொண்டே தூங்கியுள்ளார்.
அப்பொழுது திடீர் என ஹெட்போன் வெடித்தது. இந்த விபத்தில் முதியவரின் காதுகள் பலத்த காயம் அடைந்தது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததினால் அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மருத்துவர்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக, திமுக, அதிமுக.. அடுத்தடுத்து ஆளுநரை சந்தித்த தலைவர்கள்.. தவெக அரசுக்கு நெருக்கடியா?
ஜூலை 20 முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: மத்திய அரசு அறிவிப்பு
Lookout Notice: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்
குதிரை பேர விவகாரம் : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தம்பி அசோக் ஆஜராக சம்மன்
Lokbhavan announcement: மக்கள் இனி ஆளுநர் மாளிகையில் புகார் அளிக்கலாம் : ஆளுநர் மாளிகை தகவல்
சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு: 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவு
ADMK: அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை
"நான் வெளிநாட்டில் இருந்தாலும் என் மனம் அறிவாலயத்தில் தான் இருக்கும்" – மு.க.ஸ்டாலின் உருக்கம்!
சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரியவில்சன் ஆஜராகவில்லை
{{comments.comment}}