அயோத்தி: ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸின் உடல் போலீஸ் பாதுகாப்புடன் சரயு நதி கரையில் ஜல சமாதி செய்யப்பட்டது.
உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகராக இருந்தவர் ஆச்சாரியா சத்யேந்திர தாஸ். இவருக்கு வயது 87 . பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த ராமர் கோவிலில் அர்ச்சகராகவும் இவர் பணியாற்றியுள்ளார். அதேபோல் ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த சாஸ்திர அறக்கட்டளையின் முக்கிய உறுப்பினராகவும் இருந்து வந்தார்.
இவர் கடந்த சில நாட்களாகவே உயர் ரத்த அழுத்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மூளையில் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக பிப்ரவரி இரண்டாம் தேதி அயோத்தியில் உள்ள சஞ்சய் காந்தி முதுநிலை அறிவியல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சிகிச்சை பலனளிக்காமல் போகவே கடந்த 12ம் தேதி காலை 8 மணி அளவில் மறைந்தார். இன்று அவரது உடல் ஜல சமாதி செய்யப்பட்டது. அதாவது மறைந்த ராமர் கோயிலின் தலைமை பூசாரி ஆச்சாரியாவின் உடலில் கற்கள் கட்டப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் சரயு நதியில் வீசப்பட்டு ஜல சமாதி செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியா முழுவதும் வைரலாகி வருகிறது.
முன்னதாக இவருடைய உடல் அயோத்தி நகர் முழுவதும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இவரின் உடலுக்கு பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
திமுகவில் இருப்பவர்கள் சிறைக்கு அஞ்சாத சிங்கங்கள் : அமைச்சர் சேகர்பாபு
தொகுதி மறுசீரமைப்பு விழிப்புணர்வு தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
பிரபல இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ், சைந்தவி தம்பதி.. ஓரே காரில் வந்து பரஸ்பர விவாகரத்து மனு தாக்கல்
பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள..துணைவேந்தர் பணியிடங்களை நிரப்புக.. டாக்டர் ராமதாஸ் கோரிக்கை!
கோயம்பேட்டில் காய்களின் வரத்து அதிகரிப்பு..முருங்கைக்காய் விலை 10 மடங்கு வீழ்ச்சி.. விவசாயிகள் கவலை!
Today gold rate:தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... என்ன காரணம் தெரியுமா?
Mumbai Indians.. என்ன கொடுமை சார் இது.. 13 வருஷமா இப்படியே நடந்திட்டிருந்தா எப்படி சார்!
தல, தல தான்... இளம் வீரர்களை மனம் திறந்து பாராட்டும் தோனி... ரசிகர்களிடம் குவியும் வாழ்த்து
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் மார்ச் 24, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}