மும்பையில் ஷாக்கிங்.. சைப் அலி கான் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள்.. சரமாரி கத்திக்குத்து!

Jan 16, 2025,04:28 PM IST

மும்பை: பாலிவுட் நடிகர் சைப் அலிகான் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர், அவரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சைப் அலிகான் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


பிரபல பாலிவுட் நடிகர் சைப் அலிகான் மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். வீட்டில்  குடும்பத்தாருடன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும்போது இன்று அதிகாலை 2.30 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்து கொள்ளையடித்ததோடு நடிகர் சைப் அலிகானை கத்தியால் குத்தியுள்ளாராம். அப்போது சத்தம் கேட்டு குடும்ப உறுப்பினர்கள் வெளியே வந்ததைப் பார்த்து கொள்ளையன் தப்பி ஓடி விட்டார் என காவல்துறை தெரிவித்துள்ளது.




வீட்டில் உள்ள சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி போலீசார் குற்றவாளியை பிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக மும்பை பந்த்ரா காவல் நிலையத்தில் எப்ஐ ஆர் பதிவு செய்து, விசாரணைக்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர். 


கொள்ளையடிக்க வந்தபோது சைப் அலிகான் கத்தியால் குத்தப்பட்டாரா அல்லது இது முன்கூட்டியே திட்டமிட்ட கொலை முயற்சியா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.  


கத்திக்குத்தால் படுகாயம் அடைந்த நடிகர் சைப் அலிகான் தற்போது லீலாவதி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மருத்துவமனை வட்டாரத்தில் கூறுகையில், சைபர் அலிகான் அதிகாலை 3.30  மணி அளவில் கத்திக் குத்துக் காயத்துடன் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.  அவருக்கு இரண்டு மூன்று இடங்களில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது. காயங்களில் ஒன்று அவரது முதுகெலும்பு அருகில் உள்ளது.


இதனால் நரம்பியல் நிபுணர் டாக்டர் நிதின் டாங்கே, அழகு சிகிச்சை நிபுணர் டாக்டர் லீனா ஜெயின் மற்றும் மயக்க மருந்து டாக்டர் நிஷா காந்தி ஆகியோர் அங்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். அறுவை சிகிச்சை முடிந்த பின்னரே சைப் அலிகானின் உடல்நிலை குறித்து விபரங்கள் தெரியவரும் என தெரிவித்துள்ளனர். 


பாலிவுட்டில் முன்னணி நடிகராக பல்வேறு படங்களில் நடித்து புகழ்பெற்ற சைப் அலிகான்  மீதான இந்த கத்திக்குத்து சம்பவம் ஹிந்தி திரை உலகில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

news

ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!

news

பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை

news

தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!

news

"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு

news

4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு

news

"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

news

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்

news

முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்