கோயம்புத்தூர்: தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அவர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2-ம் தேதி இரவு, கோவை விமான நிலையம் அருகே உள்ள ஒரு ஆளரவமற்ற ஒதுக்குப்புறமான பகுதியில் 21 வயதான கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூன்று பேர், மாணவியின் நண்பரை கொடூரமாகத் தாக்கிவிட்டு, மாணவியைக் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.
இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெண்கள் பாதுகாப்பு குறித்த பெரும் அச்சத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக பீளமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் தொடர்புடைய சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் (எ) கருப்பசாமி (30), அவரது சகோதரரான
கார்த்திக் (எ) காளீஸ்வரன் (21), மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த குணா (எ) தவசி (20) ஆகியோரை போலீஸார் சுட்டுப் பிடித்தனர்.
கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. நீதிபதி வி. சுந்தர்ராஜன் இன்று இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பை வழங்கினார்: குற்றம் சாட்டப்பட்ட மூவர் மீதான குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி அறிவித்தார். மேலும் குற்றவாளிகள் மூவருக்கும் வாழ்நாள் முழுதும் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழ்நாடு அரசு ரூபாய் 7 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். சம்பவம் நடந்த 126 நாட்களுக்குள் (சுமார் 4 மாதங்கள்) இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tamil Nadu Budget: ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!
பெரம்பூர் தேர்தல் வழக்கு : முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு
எம்எல்ஏ.,வை கைது செய்ய முடியுமா?: சபாநாயகர் விளக்கம்!
பிரதமர் மோடி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி விமர்சனம்
“எங்களுக்கு அநீதி நடந்துள்ளது” – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் பரபரப்பு பேட்டி!
"புத்தகப் பை சுமை குறைக்கப்படும்": பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!
மக்களவையில் 2ஆவது நாளாக எதிர்கட்சிகள் அமளி: தொடர்ந்து அவை ஒத்திவைப்பு!
பிரதமர் மோடி தலைமையில் தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்
பி.வி. சிந்துவுக்கு விராட் கோலி சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ஜப்பானில் நடந்த மேஜிக்!
{{comments.comment}}