- அ. கோகிலா தேவி
சென்னை: சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக இன்று அதிகாலையில் வந்த இமெயில் தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று (நவம்பர் 19, 2025) அதிகாலை சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மின்னஞ்சலில், சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை வெடிக்கும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, விமான நிலையத்தில் தீவிர வெடிகுண்டு சோதனைகள் நடத்தப்பட்டன. இருப்பினும், சந்தேகப்படும்படியான பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் இது வழக்கமான புரளி என்று தெரியவந்தது.
இதுபோன்ற போலியான வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன. இப்படித்தான் கடந்த 12ம் தேதி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பின்னர் அது வாரணாசியில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. அதுவும் ஒரு புரளி என்று தெரியவந்தது.

இண்டிகோ விமான நிறுவனத்தின் குறைதீர்க்கும் மையத்திற்கு வந்த ஒரு மின்னஞ்சலில் டெல்லி, மும்பை, சென்னை, ஹைதராபாத், திருவனந்தபுரம் ஆகிய 5 முக்கிய விமான நிலையங்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சோதனைகள் பலப்படுத்தப்பட்டன.
கல்வி நிறுவனங்கள், பிரபலங்களின் வீடுகள் உள்ளிட்டவற்றுக்கும் அடுத்தடுத்து போலியான வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தவண்ணம் இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. வெளிநாடுகளிலிருந்த இவை அனுப்பப்படுவதால் மிரட்டல் விடுப்போரை பிடிப்பதும் பெரும் சிரமமாக உள்ளது.
(அ.கோகிலா தேவி, திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் மற்றும் தென்தமிழ் இணையதளம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் இடம் பெற்று எழுதி வருகிறார்)
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}