சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு போனில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. சிறிது நேரத்திலேயே மிரட்டல் விடுத்த தேவராஜ் என்பவரை போலீஸாார் கைது செய்தனர்.
சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை உள்ளது. இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் குண்டு வைத்திருப்பதாகவும், அந்த குண்டு எப்பொழுது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்று, சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து போலீசார் உடனே ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு நிபுணர்களை அழைத்து சோதனை நடத்தினர். இந்த சோதனையில் போனில் வந்த தகவல் புரளி என்று தெரிய வந்தது.

இந்நிலையில் போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை செய்ததில் மிரட்டல் விடுத்தவர் சிக்கினார். அவரது பெயர் தேவராஜ். கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் என்றும், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது. இருப்பினும் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே பாணியில் கடந்த சில நாட்களாகவே மிரட்டல்கள் வந்தவண்ணம் உள்ளன. குறிப்பாக பள்ளிக்கூடங்களுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வருவது சகஜமாகி விட்டது. ஆளுநர் மாளிகைக்கு தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}