சென்னை ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்.. புரளி கிளப்பிய கள்ளக்குறிச்சி தேவராஜ் கைது!

May 31, 2024,01:41 PM IST

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு போனில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. சிறிது நேரத்திலேயே மிரட்டல் விடுத்த தேவராஜ் என்பவரை போலீஸாார் கைது செய்தனர்.


சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை உள்ளது. இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் குண்டு வைத்திருப்பதாகவும், அந்த குண்டு எப்பொழுது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்று, சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போனில்  மிரட்டல்  வந்துள்ளது. இதையடுத்து போலீசார் உடனே ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு நிபுணர்களை அழைத்து சோதனை நடத்தினர். இந்த சோதனையில் போனில் வந்த தகவல் புரளி என்று தெரிய வந்தது.




இந்நிலையில் போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை செய்ததில் மிரட்டல் விடுத்தவர் சிக்கினார். அவரது பெயர் தேவராஜ். கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் என்றும், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது. இருப்பினும் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதே பாணியில் கடந்த சில நாட்களாகவே மிரட்டல்கள் வந்தவண்ணம் உள்ளன. குறிப்பாக பள்ளிக்கூடங்களுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வருவது சகஜமாகி விட்டது.  ஆளுநர் மாளிகைக்கு தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

news

இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)

news

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

news

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்

news

அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!

news

பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?

news

இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )

news

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்

news

ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்

அதிகம் பார்க்கும் செய்திகள்