மும்பை: மும்பை லோக்கல் ரயிலில் குண்டு வெடிக்கும் என்று மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளதால் ரயில்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மும்பை போலீஸாருக்கு இதுதொடர்பாக ஒரு தொலைபேசி மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் ஒரு ஆண் பேசினார். அந்த நபர் கூறுகையில், மும்பையில் உள்ள ஒரு உள்ளூர் ரயிலில் தொடர் குண்டுவெடிப்புகள் நடக்கவுள்ளன. நான் விலே பார்லே பகுதியிலிருந்து பேசுகிறேன் என்று கூறி விட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.
அந்த நபரின் மிரட்டலை நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. ரயில்களுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் படையினரும், மோப்ப நாய்களின் உதவியுடன் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
தொலைபேசியில் பேசிய மர்ம நபரைக் கண்டுபிடிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த காலங்களில் மும்பை பல தீவிரவாத தாக்குதல் சம்பவங்களைக் கண்டுள்ளது. தொடர் குண்டு வெடிப்புகள் மும்பைக்கு புதிதல்ல. பல முறை தீவிரவாதிகளின் தாக்குதலில் சிக்கி காயம்பட்ட நகரம்தான் மும்பை. ஆனால் சமீப ஆண்டுகளாக எந்தவிதமான தாக்குதலும் இல்லாமல் அமைதியாக இருந்து வரும் நிலையில் தொடர் குண்டு வெடிப்பு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாட்டாளி மக்கள் கட்சி என்பது தனிப்பட்ட நபரின் சொத்து கிடையாது: அன்புமணி ராமதாஸ்!
கூடல் மாநகரில் கூடுகிறது கழகப் பொதுக்குழு.. பொதுத் தேர்தலில் வென்றிடுவோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஈடில்லாத மாபெரும் கலைஞன் கமல்ஹாசன்.. அவரை சிறுமைப்படுத்துவதா?.. நடிகர் சங்கம் கண்டனம்
மாநிலங்களவை சீட் ஒதுக்கியதற்கு.. முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமலஹாசன்!
அன்புமணிக்கு பக்க பலமாகும்.. செளமியா அன்புமணி, 3 மகள்கள்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!
பாமக பொருளாளர் திலகபாமாவை நீக்கிய டாக்டர் ராமதாஸ்.. தொடர்வார் என்று அறிவித்தார் அன்புமணி!
அன்புதானே எல்லாம்.. பாமகவின் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 23 மா.செக்களில் 22 பேர் வருகை!
வண்டி வண்டியாக கொண்டு வந்து கொட்டப் போறாங்க.. என்ன பண்ணப் போறீங்க?.. விஜய் கேள்வி
தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்.. முதல்வர் மு க ஸ்டாலின்
{{comments.comment}}