மும்பை: மும்பை லோக்கல் ரயிலில் குண்டு வெடிக்கும் என்று மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளதால் ரயில்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மும்பை போலீஸாருக்கு இதுதொடர்பாக ஒரு தொலைபேசி மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் ஒரு ஆண் பேசினார். அந்த நபர் கூறுகையில், மும்பையில் உள்ள ஒரு உள்ளூர் ரயிலில் தொடர் குண்டுவெடிப்புகள் நடக்கவுள்ளன. நான் விலே பார்லே பகுதியிலிருந்து பேசுகிறேன் என்று கூறி விட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.
அந்த நபரின் மிரட்டலை நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. ரயில்களுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் படையினரும், மோப்ப நாய்களின் உதவியுடன் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
தொலைபேசியில் பேசிய மர்ம நபரைக் கண்டுபிடிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த காலங்களில் மும்பை பல தீவிரவாத தாக்குதல் சம்பவங்களைக் கண்டுள்ளது. தொடர் குண்டு வெடிப்புகள் மும்பைக்கு புதிதல்ல. பல முறை தீவிரவாதிகளின் தாக்குதலில் சிக்கி காயம்பட்ட நகரம்தான் மும்பை. ஆனால் சமீப ஆண்டுகளாக எந்தவிதமான தாக்குதலும் இல்லாமல் அமைதியாக இருந்து வரும் நிலையில் தொடர் குண்டு வெடிப்பு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு
போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை
கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி
கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!
வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!
தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்
சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்
{{comments.comment}}