Book Reading: எட்டும் தூரத்தில் புத்தகங்கள் - தேவகோட்டை பள்ளியில் தொங்கும் நூலகம் தொடக்கம்!

Mar 31, 2026,01:21 PM IST

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் இளம் வயது  மாணவர்களின் வாசிப்பை  மேம்படுத்தும் வகையில் தொங்கும் நூலகம்  அமைக்கப்பட்டது.


இன்றைய டிஜிட்டல் உலகில் மாணவர்களிடையே குறைந்து வரும் புத்தக வாசிப்புப் பழக்கத்தை மீட்டெடுக்கவும், இளம் வயதிலேயே தேடல் ஆர்வத்தை வளர்க்கவும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி ஒரு முன்மாதிரியான முயற்சியை மேற்கொண்டுள்ளது.


வழக்கமான நூலகங்களுக்குச் சென்று புத்தகங்களைத் தேடி எடுக்கும் முறையை மாற்றி, மாணவர்கள் எளிதில் அணுகும் வகையில் வகுப்பறைகளிலும் தாழ்வாரங்களிலும் புத்தகங்கள் தொங்கவிடப்பட்டுள்ளன. இந்த "தொங்கும் நூலகம்" மாணவர்களின் கவனத்தை ஈர்த்து, ஓய்வு நேரங்களில் தாங்களாகவே முன்வந்து வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.




சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆல்  தி சில்ட்ரன் தொண்டு  நிறுவனத்தின் மூலமாக தொங்கும் நூலகம் அமைக்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு வந்தவர்களை ஆசிரியை வள்ளிமயில் வரவேற்றார். தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் பள்ளி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் தொங்கும் நூலதிற்கான  புத்தகங்கள் வழங்கப்பட்டது. தொங்கும் நூலகமும் அமைக்கப்பட்டது. 


இந்த நூலகம் வாயிலாக மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும்,  மிக எளிதாக புத்தகங்களை  வாசிக்கவும் தொங்கும் நூலகம் பயன்படும் என்று  தேவகோட்டை ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியின் நிறைவாக ஆசிரியை முத்துலட்சுமி நன்றி கூறினார்.


பள்ளியின் இந்தப் புதுமையான முயற்சியை கல்வித் துறையினரும், பெற்றோர்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். இந்தத் தொங்கும் நூலகம் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிப்பதுடன், அவர்கள் எதிர்காலத்தில் சிறந்த நூலகப் பயனாளர்களாக உருவாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

காங்கிரஸால் காயப்பட்டுள்ளோம்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்.. திமுக

news

ரோஜா பூ கொடுத்து புதிய மாணவர்களை அன்புடன் வரவேற்ற தேவகோட்டை ஆசிரியர்கள்!

news

புதிய கல்வியாண்டு.. அனைவரும் இணைந்து அறிவுச் சுடரை உயர்த்திப் பிடிப்போம்!

news

Tamil Life Qoutes: தெரிந்து கொள்வதை விட புரிந்து கொண்டால் .. அன்பு ஆயுள் வரை நீடிக்கும்.!

news

மாணவர் நலனைக் காப்பாற்றுங்கள்.. அமைச்சரிடம் கணினி ஆசிரியர்கள் கோரிக்கை

news

Vipuvana sangadahara chaturthi: விபுவன சங்கடஹர சதுர்த்தி.. விரதம் இருந்து விநாயகனை வழிபடுவோம்

news

லீவு முடிஞ்சாச்சு.. பள்ளிக்கூடம் திறந்தாச்சு.. உற்சாகமாக திரண்டு வந்த மாணவ, மாணவியர்!

news

Om Sai.. அன்பே சாய்!

news

Remembering SPB: S. P. பாலசுப்ரமணியம் .. ஒரு தெய்வீக ஆன்மா!

அதிகம் பார்க்கும் செய்திகள்