- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: என்னப்பா இது பிரேக்பாஸ்ட் எல்லாம் முடிச்சு வேலையும் ஆரம்பிச்சாச்சு.. இப்ப வந்து பிரேக்பாஸ்ட் ரெசிப்பி சொல்றீங்கன்னு கேக்காதீங்க சிஸ்டர்ஸ்.. இதை நாளைக்கு செஞ்சு பாருங்க.. இல்லாட்டி செவ்வாய்க்கிழமை பண்ணிப் பாருங்க.. அம்புட்டு டேஸ்ட்டா இருக்கும்.
மொறு மொறு தோசைக்கும் மல்லிப்பூ இட்லிக்கும், சூடான சாதத்திற்கும் இந்த கத்திரிக்காய் பீர்க்கங்காய் கொத்சு செம மேட்ச்சாக இருக்கும். அதேபோல கர்ப்பிணிப் பெண்களுக்கும் ரொம்பப் பிடிக்கும். வீட்ல யாராவது முழுகாம இருந்தா செஞ்சு கொடுங்க, ருசிச்சு சாப்டுவாங்க.
சரி வாங்க ரெசிப்பியைப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
கத்திரிக்காய் - 4 (கழுவி கட் செய்யவும்- தண்ணீரில் போடவும்)
பீர்க்கங்காய் - ஒரு சிறிய கப் (தோல் நீக்கி கட் செய்தது)
சின்ன வெங்காயம் - 10
(அல்லது) பெரிய வெங்காயம் - 2 (கட் செய்யவும்)
பூண்டு - ஆறு பல்
சீரகம் - ஒரு ஸ்பூன்
வர மிளகாய் - 3 பிளஸ் 2
பச்சை மிளகாய் ஒன்று
நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு உளுத்தம் பருப்பு - (தாளிக்க) ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை மல்லித்தழை - ஒரு கைப்பிடி
தக்காளி - 3 (கட் செய்யவும்)
உப்பு புளி காரம் - தேவைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப
செய்முறை
1. கத்திரிக்காய் + பீர்க்கங்காய் + சின்ன வெங்காயம் + பூண்டு + தக்காளி + வர மிளகாய் மூணு + சீரகம் + ஒரு கப் தண்ணீர் இவை அனைத்தும் குக்கரில் போட்டு இரண்டு விசில் விடவும்
2. ஆறிய பின் தண்ணீரை வடிகட்டி மிக்ஸியில் பல்ஸ் மோடில் ஒன்று அல்லது இரண்டு டைம் போடவும் (மல்லித்தழை சேர்த்து)
தாளிப்பு - எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை வடகம் இருந்தால் போட்டு தாளிக்கவும். அதில் சீரகம் வரமிளகாய் போடவும் (இது டெக்கரேஷனுக்கும் சுவைக்கும்)
3. அதே வானலியில் மிக்ஸி கலவை + தண்ணீர் (மீதம் இருந்தால்ஃ ஊற்றி கிளறவும்.. சூப்பரா கொத்சு ரெடி
புளி, தேவைப்பட்டால் சேர்க்கவும்... அது கட்டாயம் கிடையாது, உங்க விருப்பம்தான்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
{{comments.comment}}